இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த சனுயன் வயது( 22,) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் சாரதி பயிற்சி நிறைவு பெற்றவுடன் வாகனத்தில் இறங்கி எதிர்த்து திசைக்கு சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த மீன் ஏற்றி சென்ற வாகனம் வேகமாக வந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது.
இளைஞன் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார். வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















