அனைத்தும் ...
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
LATEST ARTICLES
லொத்தரில் வென்ற 10 இலட்சம் பணத்துடன் சந்தோஷமாக வீடு திரும்பிய இளைஞன் சண்முகம் ஆனந்தன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன் ஒருவன் குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹொரண - வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
போதனா வைத்தியசாலை கழிவு நீர் தொட்டியில் பிறந்த சிசுவின் சடலம்! தாயார் யார்?
பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார். இந்தச் சிசு யாருடையது என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுவிஸ்லாந்தைச் சேர்ந்த புலம்பெயர் தமிழன் ஞானேந்திரன் யாழில் மரணம்!
ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வசித்த ஜேம்ஸ் ஞானேந்திரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த போது உடுவிலில் உடுவில் பகுதியில் இன்று திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று காலை (12.04.2026) உயிர்துறந்தார். சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ்ப்பாடசாலையான பிறைபிளட் அக்சியோனின் பாசல் தமிழ்ப் பாடசாலை மற்றும் பாசல் தமிழ் கலைவன் பாடசாலைகளில் தமிழ் கற்பித்த ஆசிரியரும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமாவார்.
முல்லைத்தீவு மல்லாவியில் 2 யுவதிகள் மயக்கமருந்து கொடுத்து துஸ்பிரயோகம்! மதபோதகர் உட்பட 3 பேர் கைது!
முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும் , போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் வான் ஒன்றில் வீடு திரும்பினார்கள். பயணத்தின்...
யாழில் 5 வருட பகையை முடித்த தருணம்! மயூரன் குத்திக் கொலை! வீடியோ
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சந்தேக நபரை இன்றைய தினம்...
இன்றைய (13.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று சொத்து தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மன குழப்பம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல்...
பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்!
பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி இன்று காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள் நாளை காலை இடம் பெறும்..
மட்டக்களப்பில் பயங்கரம்! புதையலுக்காக 3 தலைமுறையாக பிறந்த முதல் ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முற்பட்ட பிரதேசசெயலக கணக்காளர் உட்பட 9 பேர் கைது!
மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதவான் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இரவு, மண்முனை பிரதான...
யாழில் அதி வேகம்!! உருண்டு புரண்ட வாகனம்!
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர மின்கம்பத்துடன் மோதியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 பேர் தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் சித்திரா எங்கே? கணவன் தேடுகின்றார்!
இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்... புதுக்குடியிருப்பு மாணிக்கபுரத்தினை சேர்ந்த குடும்பப் பெண்ணை கடந்த 6 நாட்களாக காணவில்லை என அவரது உறவுகள் தேடுகின்றார்கள். காளிமுத்து கமநாயகி (சித்திரா) வயது 48 மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர், உறவுகள் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை, இவரை கண்டால் தெரியப்படுத்துங்கள். கணவன் - 074 27 23 167 மகன் - 077 39 16 208




















































