LATEST ARTICLES

இன்றைய (15.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம்....

முல்லைத்தீவில் 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு! மரணத்தில் சந்தேகம்!

0

முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்துபெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா...

யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!! 

0

யாழ்ப்பாணம்: கந்தர்மடம் அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நல்லூர் சிவன் கோவில் பூசகர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நல்லூர் சிவன் கோவிலைச் சேர்ந்த பூசகர் பலத்த காயங்களுக்குள்ளானார். தற்போது இவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.

யாழ் தீவகத்தில் எலும்புக்கூட்டுச் சிதைவுகள் மீட்பு! மரத்திலிருந்த மீட்கப்பட்ட தடயங்கள்! இறந்தவர் யார்? கொலையா?

0

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபான போத்தல்களும் , இளம்சிவப்பு (பிங் கலர்) நிற ரீஷேர்ட் ஒன்றும் காணப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனது காணியினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பார்வையிட சென்ற நபர் என்பு சிதிலங்களை கண்ணுற்று , பொலிஸாரின் அவசர சேவை இலக்கத்திற்கு அறிவித்திருந்தார். அதனை...

பிரித்தானியாவில் 46 வயதில் புடவை கட்டி ஓட தயாராகும் மது!

0

உடை ஒரு தடையல்ல - பிரித்தானியாவில் 46 வயதில் புடவை கட்டி மரதன் ஓடி உலக சாதனை படைக்க தயாராகும் மது பிரித்தானியா - மென்செஸ்டரில் வசிக்கும் 46 வயதான மதுஸ்மிதா ஜேனா என்ற இந்திய வம்சாவளி ஆசிரியை, வரும் ஏப்ரல் 19, 2026 அன்று நடைபெறவுள்ள மென்செஸ்டர் மாரத்தான்' போட்டியில் புடவை அணிந்து ஓடி கின்னஸ் உலக சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளார். தற்போது புடவை அணிந்து அதிவேகமாக மரதன் கடந்த பெண்ணின் உலக சாதனை 3 மணி நேரம் 57 நிமிடங்கள் 7 வினாடிகளாக...

யாழில் எதிரிகளிடமிருந்து நண்பனை காப்பாற்றச் சென்ற மயூரன் வெட்டிக் கொலை! சம்பவ பின்னணி இதுதான்!

0

யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகி உயிரிழந்துள்ளார். தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இளைஞன் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை , மற்றைய இளைஞன் மேலும் இரண்டு இளைஞர்களுடன் , ஆலயத்திற்கு வந்து...

2026ம் ஆண்டு பராபர வருட ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான ஒரு ஆண்டுக்குரிய இராசி பலனகள் இதோ!!

0

மேஷம் ராசியில் சூர்யன், சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரகமாற்றங்கள் 27-06-2026 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-10-2026 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு...

திருமணமாகி 15 நாளில் விபத்தில் உயிரழந்த சிங்களச் சகோதரி பலருக்கு வாழ்வளித்தது எப்படி?

0

திருமணமாகி 2 வாரங்களில் தந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்த சிங்கள சகோதரி பலருக்கு வாழ்வளித்தார் களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி 2 வாரங்களே ஆன நிலையில், மதுஷானி பத்திரண என்ற பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறிதௌத பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற போது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி...

லொத்தரில் வென்ற 10 இலட்சம் பணத்துடன் சந்தோஷமாக வீடு திரும்பிய இளைஞன் சண்முகம் ஆனந்தன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

0

லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன் ஒருவன் குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹொரண - வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

போதனா வைத்தியசாலை கழிவு நீர் தொட்டியில் பிறந்த சிசுவின் சடலம்! தாயார் யார்?

0

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இது தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் கே.பி.பி. பத்திரண தெரிவித்தார். இந்தச் சிசு யாருடையது என்பது குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.