Home செய்திகள் இலங்கை வைத்தியர் கனடாவில் கைது!! குழந்தைகளுடன் தொடர்பை பேணிய குற்றத்தில்

இலங்கை வைத்தியர் கனடாவில் கைது!! குழந்தைகளுடன் தொடர்பை பேணிய குற்றத்தில்

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் மீது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள வைத்தியர் ஒருவர் Toronto போலீசாரால் நேற்று 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர் Toronto Sick Children வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த டிலான் திசாநாயக்க என்று Toronto போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 44 வயதான டிலான் திசாநாயக்க முடக்குவாத வைத்திய நிபுணர்(specializes in Rheumatology) என்று வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் விசாரணைை ஒன்றினை ஆரம்பித்திருந்த புலனாய்வாளர்கள், பிப்ரவரியில், Sick Children மருத்துவமனையிலும், ஒரு தனியார் இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்டு ஒரு அலுவலகக் கணினி உட்பட பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்தக் கைது சம்பந்தமாக Sick Kids மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டுகளால் தாங்கள் “மிகுந்த வருத்தமும் மன வருத்தமும்” அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளதுடன் விசாரணை குறித்து தாங்கள் அறிந்தவுடன் திசாநாயக்க உடனடியாக லீவில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தக் கைது சம்பந்தமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள Toronto பல்கலைக்கழகம், திசாநாயக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பணியிலும் இருந்தார் என்றும், இந்தக் கடுமையான குற்றங்கள் குறித்த காவல்துறை விசாரணை பற்றி அறிந்த உடனேயே அவர் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டார் என்பதையும் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

“இத்தகைய நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபருடனும் பல்கலைக்கழகம் தனது உறவை முறித்துக்கொள்ளும்,” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply