Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பொலிசார் துரத்திய போது நடந்த...

யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பொலிசார் துரத்திய போது நடந்த கதி!!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

நேற்று (27) பண்டத்தரிப்பு நகரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

வீதிப்போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளவாலை பொலிசார், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் வருவதை அவதானித்து, அவர்களை வழிமறித்தனர்.

எனினும், இளைஞர்கள் பொலிசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

பொலிசார் அவர்களை விரட்டிச்சென்று வழிமறித்த போது, இரண்டு இளைஞர்கள் தப்பியோடினர். ஒருவர் அகப்பட்டார்.

சிக்கிய இளைஞன், பொலிசாருடன் தகராற்றில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயற்சித்தார். அந்த இளைஞனை பொலிசார் கைது செய்து, தமது வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, இளைஞன் பெரும் ரகளையில் ஈடுபட்டு, வாகனத்தில் ஏறாமல் அடம்பிடித்தார். மதுபோதையில் இளைஞன் செய்த ரகளையால் சுமார் 30 நிமிடங்கள் அங்கு பரபரப்பான நிலைமை நீடித்தது.

பின்னர் ஒருவழியாக இளைஞனை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய போது, அவர் நிறை போதையில் இருந்தது தெரியவந்தது.

அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply