அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள்! வீடியோ
அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மோட்டார் சைக்கிள்களைச் கண் மூடித்தனமாகச் செலுத்துபவர்கள் இந்தக் காட்சியைக் கண்ட பின்னராவது அவதானமாக இருக்கவும்.
வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த குழந்தை – யாழில் சோகம்!
யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த குழந்தைக்கு நேற்றிரவு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இன்றைய (29.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6 ரிஷபம் இன்று திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை...
யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!
யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில், மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதுவரை மாணவி பாடசாலை சென்று வந்தார். மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், தாயார் உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து...
பருத்தி்துறையில் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், இதுவரையில் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதனால் அவர்கள் பயணித்த படகுகளுக்கு கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் நயினாதீவுக் கடலில் பாடசாலை அதிபர் வீழ்ந்து பலியான பின்னணி! நடந்தது என்ன?
'கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்' என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இன்றைய தினம் நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபர் பயணிகள் படகை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளர்களின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி வரும் போது கடற்சீற்றம் காரணமாக படகு கடலில் அடிபட்டதில் படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். அதிபர் நயினாதீவை...
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண் பலி!
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று 'ஐஸ் பக்கெட்டுகளை' விற்பனை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், அங்கு எந்தவொரு...
யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ
நயினாதீவு படகு கவிழ்ந்ததில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார். குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது. .
யாழில் ரவுடிக் குடும்பலைச் சேர்ந்த 17 வயது இளைஞனை கைது செய்யச் சென்ற பொலிசார்!! மகனை கைது செய்தால் தனது கழுத்தை அறுப்பேன் என கூறி பிளேட்டால் கழுத்தை அறுத்த தாயார்!! நடந்தது என்ன? வீடியோ
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது, கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் அங்கே வருகை தந்த இளைஞனின் தாயார் பொலிஸாரை மிரட்டி தனது கழுத்தை தானே பிளேட் மூலம் அறுத்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸாரை மிரட்டுவதால்...
மிளகாய்த்தூள், கோழி முதல் பணம், நகை வரை திருட்டு; யாழில் வீட்டை சூறையாடிய நபர்கள்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை கொழும்பிற்கு சென்றுள்ளனர். இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கொழும்பு சென்றவர்கள் நேற்று மாலை வீட்டிற்கு...









