இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிய இருவர் விபத்தில் சிக்கி மரணம்!
ஹொரணை - மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் ஹொரணை - மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் பன்னிபிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர...
யாழில் அதிவேகம்! துளசிகன் மரணம்!
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன், உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம்...
யாழில் போதைப்பொருள் பாவிக்கும் இளைஞன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு! கொலையா?
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் சிரிஞ்சும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட...
இன்றைய (19.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட...
யாழில் 66 வயதான ஓய்வு பெற்ற அரச அதிகாரியின் அன்புத் தொல்லை தாங்க முடியாது மனைவி கனடா தப்பி ஓட்டம்! வீட்டில் பல பெண்களுடன் கூத்து!! தானும் படுக்க மாட்டாள்,.. தள்ளியும் படுக்க மாட்டாள் என அதிகாரி சட்டத்தரணியிடம் கதறல்!!
யாழ் கந்தர்மடம் பகுதியில் வாழும் ஓய்வூதியர் ஒருவர் அண்மையில் சட்டத்தரணி ஒருவரை அணுகியுள்ளார்.வெளிநாட்டில் இருந்து வந்த மருமகன் தன்னை வீட்டை விட்டு எழுப்ப முயன்று வருவதாகவும் அதற்கு பொலிசாரும் உறுதுணையாக இருப்பதாகவும் சட்டத்தரணியிடம் கூறியிருந்தார். குறித்த வீட்டை தானும் மனைவியும் இறந்த பின்னரே தனது மகளு்ககு என சீவிய உரித்துடன் எழுதி வைத்துள்ளதாகவும் ஆனால் தற்போது மகளின் கணவர் வந்து தன்னை வீட்டை விட்டு எழும்புமாறு கூறி வருவாகவும் சட்டத்தரணியிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டத்தரணி வழக்கை எடுக்க ஆயத்தமான போது குறித்த...
இலங்கைத் தமிழ் பெண் டொக்டர் லக்சனாவுக்கு கனடாவில் 5 லட்சம் டொலர்கள் அபராதம்!! நடந்தது என்ன?
கனடாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு, 5 லட்சத்து 25 ஆயிரத்து 725 டாலரை திருப்பி செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வைத்தியராகப் பணியாற்றும் லக்ஷனா சிவானந்தன் என்பவருக்கு எதிராக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசு நிதியுடன் வைத்திய பயிற்சியை முடித்த பின்னர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனினும், பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அதனை மீறியமையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் அயர்லாந்தில் மருத்துவ படிப்பை முடித்த...
அம்பாந்தோட்டையில் பெண் நீதிபதி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?
அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவரது பணியை இடைநிறுத்த நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பல நீதிபதிகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து 2 பிள்ளைகளுடன் லண்டன் சென்று தலைமறைவான இலங்கைக் குடும்பப் பெண் நிஷிகா!! கணவன் பொலிசாரிடம் முறையிட்டது ஏன்?
அமெரிக்காவிலிருந்து பிள்ளைகளைக் கடத்தி வந்து பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த தாய் தேடப்பட்டு வருகிறார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 34 வயதுடைய பிரித்தானிய பிரஜையான நிஷிகா சமரதுங்க என்ற பெண், தனது இரண்டு சிறு பிள்ளைகளையும் அமெரிக்காவில் வசிக்கும் அவர்களின் தந்தையிடமிருந்து கடத்திச் சென்று, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகள் இருவரும் தற்சமயம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கக் கூடுமென, அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 43...
யாழில் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயல்!! 9 மாத குழந்தையின் தாயான நேசமலர் மின்சாரம் தாக்கிப் பலி!! Photos
யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் எனும் குடும்பப் பெண் மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார், வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது அக்...
வவுனியாவில் கோர விபத்து: பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்டான கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து...










