இந்தியாவில் பிடிபட்டு இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 2 ஆவா குழு உறுப்பினர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை!

0

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த (Aava Gang) இரண்டு முக்கிய உறுப்பினர்கள், சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தற்போது 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளனர். 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச காவல்துறையினரின் (Interpol) தேடப்படும் குற்றவாளிகளாக இவர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இருவரும், அண்மையில் மீண்டும் இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

இங்கிலாந்தில் 19 வயது பெண் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம்! 21 வயது இலங்கை தமிழ் இளைஞன் வியான் கைது!

0

21 வயதான வியான் சுரேந்திரநாதன், போன வாரம் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் செயல்பாடுகளுக்கு மயக்கும் நோக்கில் அவளுக்கு போதைப்பொருள் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வகுப்பு A போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம், நகரின் பாலிகான் பகுதியில் உள்ள ஒரு முகவரியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகாரை காவல்துறையினர் பெற்றனர். சவுத்தாம்ப்டனில் உள்ள சிர்தார் சாலையைச் சேர்ந்த 21 வயதான வியான் சுரேந்திரநாதன் மீது பின்வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன: 1. பாலியல் பலாத்காரம். 2. வகுப்பு...

கனடாவில் இலங்கை யூரியூப்பரின் செயல் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துளது! நடந்தது என்ன? வீடியோ

0

“Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த...

உலகை மறைமுகமாக இயக்கும் வலிமைமிக்க அமைப்புகளில் Club of Rome மிக முக்கியமானது! அது என்ன செய்கின்றது?

0

உலகை மறைமுகமாக இயக்கும் வலிமைமிக்க அமைப்புகளில் Club of Rome மிக முக்கியமானது. 1968 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள Rockefeller எஸ்டேட்டில் இந்த அமைப்பு உருவானது. நூறு பேர் கொண்ட மிகச் சில "மேல்தட்டு வர்க்கத்தினரை" (Global Elite) மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உண்மையில் உலக மக்கள் தொகையை பெருமளவில் குறைக்க வேண்டும் (Depopulation) என்பதையே தனது ரகசிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளது. 1972 இல் இந்த அமைப்பு வெளியிட்ட 'The Limits to Growth'...

யாழில் நள்ளிரவில் பொலிசார் நிறுத்த நிறுத்த வாகனம் ஓடிய 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? சித்தி கூறும் பரபரப்பு தகவல்! வீடியோ

0

அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போது , வாகனத்தினை ஓட்டி சென்ற சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். அந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் சித்தியார் தெரிவிக்கையில் , சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும் ,...

யாழ் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் சந்தையில் பெரும் பரபரப்பு!

0

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை 06.03 மணியளவில் துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர், தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை...

இன்றைய (10.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய சாரதி உயிரிழப்பு; யாழில் பயங்கரம்.!

0

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை 1.18 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், குறித்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மண்டைதீவு வீதித் தடையை பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிள்ளைகளுடன் படுத்திருந்த 35 வயது குடும்பப் பெண்ணிற்கு நள்ளிரவு கூரை பிரித்து உள்ளே சென்றவன் நடத்திய கொடூரச் செயல்!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு புதியகுடியிருப்பு கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில், வீட்டினுள் தாயும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்த வேளையில், வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அந்தப் பெண்தலைமைத்துவ குடும்பத்தலைவி மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான பெண் கூக்குரல் இட்டமையையடுத்து அயலவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர்...

கண்கள் மூடினாலும் மறையாத பார்வை – சீன ஆராய்ச்சியாளர்களின் புதிய தொழில்நுட்ப புரட்சி!

0

"கண்ணை மூடிக்கொண்டே என்னால் பார்க்க முடியும்" என்று யாராவது சொன்னால், அவர்களை மந்திரவாதி என்று நினைப்போம். ஆனால், இனி அப்படிச் சொல்பவர்களை 'விஞ்ஞானி' என்று அழைக்கலாம். ஆம், இனி முழு இருட்டிலும், ஏன்... கண்களை மூடிய நிலையிலும் கூட உங்களால் பார்க்க முடியும்! இப்படியொரு ஆச்சரியமான 'இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸை' (Infrared Contact Lenses) சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக நாம் அணியும் சாதாரண காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் பாலிமர்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'நானோ துகள்களை' (Nanoparticles)...