Home செய்திகள் கேகாலையில் புத்தாண்டில் பயங்கரம்!! 2 பெண்கள் உட்பட 3 பேர் குத்திக் கொலை!!

கேகாலையில் புத்தாண்டில் பயங்கரம்!! 2 பெண்கள் உட்பட 3 பேர் குத்திக் கொலை!!

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஆயுதமொன்றால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தாண்டு தினமான இன்று இலங்கையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here