க.பொ.த சாதாரணப் பரீட்சை நடைபெற இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஓ.எல் பரீட்சை எடுக்கவுள்ள 16 வயதான மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கற்றுவரும் 18 வயதான ஏ.எல் மாணவன் பிடிபட்டுள்ளான். நேற்று மதியம் 3.00 மணியளவில் இச் சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாணவியின் தந்தை வங்கி ஒன்றில் பதவி நிலை அதிகாரி ஆவார். தாயார் அரச உத்தியோகத்தர். மூத்த மகளான குறித்த மாணவிக்கு தற்போது ஓ.எல் முன்னோடிப் பரீட்சை நடைபெற்று வருவதாகத் தெரியவருகின்றது. மாணவி பரீட்சை எழுதிவிட்டு தாயாருடன் வீட்டுக்கு வந்துள்ளார். தாயார் மாணவியை இறக்கிய பின்னர் மற்றைய மகளை பாடசாலையிலிந்து ஏற்றுவதற்காக சென்ற போது சைக்கிளில் பாடசாலை சீருடையில் வந்த மாணவன் சைக்கிளை அருகில் இருந்த வர்த்த நிலையம் ஒன்றில் விட்டுவிட்டு நடந்து சென்று வீட்டினுள்ளே புகுந்துள்ளார். மற்றைய மகளை தாயார் வீட்டில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே உள்ளே சென்ற இரண்டாவது மகள் 3 மணியளவில் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்ததால் அயலவர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். அங்கு 16 வயது மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் குறித்த மாணவன் பாடசாலை சீருடையுடன் பிடிக்கப்பட்டார். 2வது மகளுக்கு அன்று ரியூசன் இருந்ததாகவும் ஆனால் அன்று மாணவி உடல் சுகவீனம் காரணமாக செல்லாததால் வீட்டில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மாணவன் இசகு பிசகாக மாட்டியுள்ளார். இரண்டாவது மகள் ஹோலுக்குள் இருக்கும் போது அறைக்குள் இருந்த கண்ணாடியை பார்த்து அதிர்ந்துள்ளார். குறித்த கண்ணாடியில் கட்டிலுக்கு கீழே ஒருவன் வெள்ளை ஆடையுடன் படுத்திருப்பதை கண்டே கத்தியுள்ளார்.இரண்டாவது மகள் கத்தும் போது மூத்த மகள் அவளது வாயை பொத்திப் பிடித்ததாக தெரியவருகின்றது. இருப்பினும் சகோதரி ஏன் இவ்வாறு தனது வாயை பொத்திப் பிடிக்கின்றார் என தெரியாது வீட்டு முற்றத்திற்கு வந்து இரண்டாவது மாணவி கத்திக் குளறியதாலேயே அயலவர்கள் உள்ளே நுழைந்துள்ளார்.
மாணவன் அங்கு வைத்து நையப்புடைக்கப்பட்டதுடன் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அதன் பின்னர் நடாத்தப்பட்ட விசாரணையில் மாணவியும் மாணவனும் காதலர்கள் என கூறியதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவன் யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் உயாதரம் கற்பவன் என்பதுடன் பொறியியலாளர் ஒருவரின் மகன் எனவும் தெரியவருகின்றது. மாணவனின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டு பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கபபட்டதாகவும் மாணவனை பிடித்த போது அயலவர்கள் சிலரால் எடுக்கப்பட்ட வீடியோக்களை இருதரப்புக்களும் சேர்த்து அழிக்குமாறு கோரியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் எந்தவித உடல் ரீதியான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மாணவன் முதல் முதல் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளது மாணவன் வைத்திருந்த தொலைபேசி வட்சப் சற்றிங்கில் இருந்து கண்டு பிடிக்கபட்டுள்ளது. மாணவி தாயாரின் சாதாரண தொலைபேசி இலக்கம் ஒன்றிற்கு லப்டொப் கணனயில் வட்சப்பை இறக்கி மாணவனுடன் நீண்ட காலமாக சற்றிங் செய்து வந்துள்ளதும் கண்டு பிடிக்கபட்டுள்ளது. அவர்களின் சற்றிங் தொடர்புகள் மூலம் அவர்கள் தவறான புகைப்படங்களை தமக்கிடையே இன்னும் அனுப்பவில்லை என்பதும் விசாரணைகளில் இருந்தும் சற்றிங்குகளிலிருந்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதல் முதல் மாணவியை தனியே சந்திக்க வந்தே மாணவன் மாட்டுப்பட்டுள்ளார். தனது தங்கை மதிய போசணம் சாப்பிட்ட பின்னர் 3 மணிக்கு ரியூசனுக்கு சென்று விடுவாள் என கூறியே மாணவனை மாணவி அழைத்துள்ளதும் தனது தாயார் 4 மணிக்கு பிறகே வீட்டுக்கு வருவார் என்பதையும் தந்தை 7 மணிக்கு வீட்டுக்கு வருவார் என்பதையும் மாணவி சற்றிங்கில் குறிப்பிட்டுள்ளமையும் கண்டு பிடிக்கட்டுள்ளது. மிகத் துள்ளியமாகத் திட்டமிட்டு திருவிளையாடல் செய்ய முற்பட்ட இருவரையும் இரண்டாவது சகோதரியின் சுகவீனம் காட்டிக் கொடுத்துள்ளது.
யோகாசனம் கற்கச் சென்ற போதே இருவரும் சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரு மகள்களும் பாடசாலை உட்பட எங்கு சென்றாலும் தனியே செல்வதில்லை எனவும் தாய், தந்தையே அவர்களை கொண்டு சென்று இறக்கி வருவதாகவும் அவ்வாறான ஒரு நிலையிலேயே இவ்வாறு குறித்த மாணவி செயற்பட்டுள்ளது தொடர்பாக ஏனைய பெற்றோர்களும் அவதானமாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இரு தரப்பினரும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் காதலில் ஈடுபட்டவனும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுபவன் அல்ல என்பதுடன் உயர்தரத்தில் சிறப்பு தேர்ச்சி பெறக்கூடியவன் எனவும் அறிய முடிகின்றது. இதுவே கஞ்சாக் காவாலிகள் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் நிலமையை சிந்தித்துப் பாருங்கள்…
பிள்ளைகளின் சகல செயற்பாடுகள் மற்றும் கைத் தொலைபேசிகள், கணனிகளை தொடர்ச்சியாக அவதானித்துக் கொள்ளுங்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













