இலங்கையில் பேருந்து ஒன்றில் அருகில் அமர்திருந்த பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தகாத முறையில் அங்க சேட்டை விட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் வேலை நிமித்தமோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பேருந்துகளில் பயணம் செல்கையில் சிலர் இவ்வாறு அங்க சேட்டையில் ஈடுபடுவது, முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனைக்குரிய ஒன்றாகும்.
நாளை தமது பிள்ளைகளுக்கோ , சகோதரிகளுக்கோ அல்லது அவரது மனைவிக்குமே கூட இதுபோன்ற சம்பவம் நிகழலாம்.இவ்வாறு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒரு சில ஆண்களால் ஒட்டுமொத்த ஆண்களையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படும்.
எனவே பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














