Home செய்திகள் இலங்கை செய்திகள் வவுனியாவில் நகர் பகுதியில் இருந்த சடலத்தால் பரபரப்பு!

வவுனியாவில் நகர் பகுதியில் இருந்த சடலத்தால் பரபரப்பு!

வவுனியா – கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக இன்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது.

அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply