Home செய்திகள் இலங்கை செய்திகள் வீதியை கடக்க முயன்ற முதியவரை மோதித்தள்ளிய கார்; ஸ்தலத்தில் பலி! பரந்தனில் பரபரப்பு

வீதியை கடக்க முயன்ற முதியவரை மோதித்தள்ளிய கார்; ஸ்தலத்தில் பலி! பரந்தனில் பரபரப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply