புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடந்த வருடம் கணவருடம் அமெரிக்கா சென்ற இலங்கை பெண் விபத்தில் உயிரிந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஹஷினி ஹேரத் என்ற 29 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தெற்கு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, ஹஷினி ஹேரத் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது.
இந்த விபத்தில் ஹஷினி ஹேரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியும், அதில் பயணித்தவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதிக்கு எதிராக பொலிஸார் போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், தனது கணவருடன் கடந்த ஆண்டு இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்ற ஹஷினி, மிகவும் அன்பான மற்றும் கனிவான பெண் என அவரது நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
அவரது திடீர் மறைவு குடும்பத்தினருக்கும் சமூகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹஷினியின் பூதவுடலை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, ரோசெஸ்டர் இலங்கை அமெரிக்க சங்கத்தினால் GoFundMe நிதியுதவித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














