இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும்,மிக் 29 விமானம் ஒன்றையும்,எஸ்யு 30 போர்விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாக்கிஸ்தான் தெரிவிக்கவில்லை.
இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை
இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாக்கிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் வெளியிட்டுள்ளது. சில இந்திய படையினர் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.