பிரான்ஸ் பரிஸில் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த குட்டி என்பவர் நேற்று 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.. பாரிஸின் வடகிழக்கு பகுதியிலுள்ள பொபிக்னி (Bobigny) என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தகராறில், இரண்டு பேரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய தாகவும் காவல்துறை உடனே சரணடைய கூறியபோதும் மறுத்து மேலும் பலரை காயப்படுத்தியதை தொடர்ந்து காவல் துறையிரையும் மிரட்டிய இந்த நபர் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார். இவர் மனப்பிறழ்வு நோய்க்கு உள்ளாகியிருந்ததாக அறிய முடிகின்றது.
விடுதலை புலிகளின் முக்கிய தளபதி கோபிநாத்தின் தம்பி எனவும் அறியமுடிகிறது.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு நியாயமான தற்காப்புத் தானா என்பதை ஆராய பிரெஞ்சு பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான IGPN மற்றும் பொபிக்னி நீதிமன்றமும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.



இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














