இந்த புகைப்படம் யாழில் உள்ள விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை எடுத்தவன் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன். விளையாட்டுப் பயிற்சி என கூறி வீட்டில் இருந்து பாடசாலை செல்வதாக கூறிச் சென்று இந்த யுவதியுடன் தங்கியுள்ளான்.
அரச ஊழியரான தந்தை தனது மகனுக்கு தனது வெளிநாட்டு சகோதரியால் கொடுக்கப்பட்ட கைத் தொலைபேசியை கட்டாயப்படுத்தி வாங்கிப் பார்த்த போது குறித்த புகைப்படம் மற்றும் அந்தரங்க வீடியோக்கள் அகப்பட்டுள்ளன.
ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவருடன் நட்பாக இருந்த குறித்த தந்தை இது தொடர்பாக மிகவும் கவலையுடன் தெரிவித்து பெற்றோரை எச்சரிக்குமாறு கூறியு்ளளார். தனது மனைவி இரகசிய இடததில் வை்ததிருந்த நகைப் பையை எடுத்து அந்தப் பையில் காணப்பட்ட மகனின் ஒரு வயதில் போடப்பட்ட மோதிரங்களை களவெடுத்து அவற்றை விற்பனை செய்து மகன் இவ்வாறு உல்லாசமாக யுவதியுடன் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் அளவில் குறித்த யுவதியிடம் மகன் பறி கொடுத்துள்ளதாக தந்தை கூறுகின்றார்.
மகனை விசாரித்த போது இந்த யுவதியின் பெயர் டில்கா என்று மட்டுமே தெரியும் என மகன் கூறியுள்ளானாம். இந்த றுாம் எங்கு உள்ளது என்ற தகவலையேh அல்லது யாரால் இந்தப் பெண் மகனுடன் தொடர்பு கொண்டாள் என்பதையோ தனது மகன் கூறாது மௌனம் சாதிப்பதாகவும், அவன் மீது அழுத்தம் கொடுக்க முற்படும் போது தனது மனைவி மகன் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிடுவான் என கூறி தன்னை கட்டுப்படுத்துவதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
தயவு செய்து இந்த றுாமின் அடையாளங்கள் எந்த விடுதியில் உள்ளது என்பதை அறிந்தவர்கள் எமக்கோ அல்லது பொலிசாருக்கோ அல்லது அந்த பிரதேசத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளுக்கோ உடனடியாக தெரிவியுங்கள். குறித்த மாணவன் தனியே இந்தப் பெண்ணை அந்த அறைக்கு கொண்டு சென்று உல்லாசமாக இருந்துள்ளான். அதே வேளை இவனது நண்பர்களின் ரெலிகிறாம் சற்றிங் தொடர்பாக தந்தை கவனத்தைச் செலுத்திய போது சில நண்பர்களும் இந்த யுவதியுடன் உல்லாசமாக இருந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றார். தற்போது ரெலிக்கிராம் செயலியே இளவயதானவர்களிடம் பிரபலமாக உள்ளதாகவும் பெற்றோக்கு அது தொடர்பான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே பெற்றோரே உங்களது பிள்ளைகளில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள். இல்லாதுவிடின் அடுத்தது உங்கள் பிள்ளையும் கழுத்தில் கயிற்றை கட்டி தொங்கலாம்…..

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














