யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்*டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால் பணம் வாங்கியவர்களுக்கும், பணத்தை கொடுத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரவு வேளையில், வீட்டிற்குள் நுழைந்த கும்பல், வீட்டை தாக்*கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














