Home செய்திகள் பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான் – நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?

பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான் – நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?

பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான். அதிகாரத்தை பாவிக்க வேண்டும், துஸ்பிரயோகம் தான் செய்ய கூடாது என்று முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

நான் பதவி அதிகாரத்தை 100வீதம் பாவித்துள்ளேன். அதனால்தான் அரசதரப்பிலிருந்தோ வேறு பலதரப்பிலிருந்தோ விரல்கள் நீட்டப்படவில்லை. சாக்கடை அரசியல் என்று கூறுகிறார்கள், அதனை பூக்கடை அரசியலாகவும் மாற்றலாம். அதற்கு காலம் சரியான பதில் சொல்லும்.

நெல்சன் மண்டேலா, தந்தை செல்வா ஆகியோர் சாக்கடை அரசியல் செய்யவில்லை. நான் நீதித்துறையை நேசிக்கின்றேன், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா வைக்கப்படவில்லையா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here