மின்னல் தாக்கி 23 வயது யுவதி பலி.!!
தாயும் தந்தையும் மழையில் நனைவதை தடுக்க குடை கொடுக்கச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மொனராகலை, வெல்லவாய ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் இந்த துயரச் சம்பவம் (08/04/2026)இடம்பெற்றுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவரது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பெய்த கடும் மழையால், பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் 23 வயதான இளம் யுவதி உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து பஸ்களில் மட்டக்களப்பு செல்பவர்கள் அவதானம்! ஓசி பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டவர்களுக்கு நடந்த கதி!
ஓசி பிஸ்கட்டுகளுக்கு ஆசைப்பட வேண்டாம். பேரூந்துகளில் அரங்கேறும் மற்றுமொரு கொடுமை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள்...
மட்டு’வில் வீட்டைச் சுற்றி உயரமான மதில் கட்டி நவீன கமராக்கள் பூட்டிய பின் யுவதி செய்து கொண்டிருந்த செயல்! சுற்றி வளைத்து பிடித்த பொலிசார்!
பொலிஸார் சுற்றிவளைப்புக்கு வரும்போது, ஒளிப்படக்கருவிகள் ஊடாக அதனை அவதானிக்கும் இப்பெண், வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே யாரும் இல்லாதது போன்ற பாவனையில் நீண்டகாலமாகத் தப்பித்து வந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின் கீழ், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் விசேட குழுவினர் முற்றுகை மேற்கொண்டனர். பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையிலான குழுவினர், குறித்த வீட்டைத் தந்திரமான முறையில் சுற்றிவளைத்துச் சோதனையிட்டபோதே, 105 போத்தல் கசிப்புடன் இப்பெண் பிடிபட்டார். பெண்ணின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள்...
பிரான்சிலிருந்து ஜேர்மன் நண்பியை சந்தித்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் பிரகாஸ் மீது தாக்குதல்! கணவன் சந்தேகம்?
தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக பிரான்சிலிருந்து ஜேர்மனி சென்ற யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான அருளானந்தம் பிரகாஸ் என்பவர் மீது ஜேர்மன் டார்ட்முண்ட் (Dortmund) நகர்ப் பகுதி ரயில் நிலையத்தில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் பிரகாஸ் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது நண்பியைச் சந்தித்த பின் அவரது காரில் பயணம் செய்து (Dortmund Hbf ரயில் நிலையத்திற்கு அருகே இறங்கி அருகில் இருந்த...
கிளிநொச்சி நகர் பகுதியில் வாள் வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த 2 இளைஞர்கள்!
கிளிநொச்சி நகர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச்சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட எம் ரெக் அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஒப்பந்தகார்கள் தங்கியுள்ள நிலையில் பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போதே, குறித்த இருவரும் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர்களுக்கிடையில் ஏட்பட்ட முரன்பாட்டினால் இருவர் வைத்தியசாலையில் மூவர் கைது! சம்பவத்தில் காயமடைந்த குறித்த இருவரும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று...
அம்பாறையில் நீராடத் தடை: மீறுவோர் மீது சட்டம் பாயும்!
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை (09) அன்று தெரிவித்தார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சியின் அறிவுறுத்தலுக்கமைய, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், நீர்ப்பாசனப் பணிப்பாளர், சகல பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள்,...
பெக்கோவுடன் மோதி நொருங்கிய அரச பேரூந்து!! பலர் படுகாயம்! வீடியோ
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, பெக்கோ இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (09) அதிகாலை 1:30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை பேருந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, துறைமுகத்தை நோக்கி வீதியின் குறுக்கே சென்ற பெக்கோ இயந்திரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் போது பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்...
அக்காவைக் குத்திக் கொலை செய்த தம்பி! வவுனியாவில் சம்பவம்!
வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம்...
கனடாவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான புதிய விதி!
கனடாவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான புதிய விதி ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய உங்கள் கடவுச்சீட்டு 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படாவிட்டால் உங்களுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும். குறித்த விதி கடந்த மார்ச் 31ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.30 Days for Free' என அழைக்கப்படும் இந்த சேவை, சேவைகளை மேம்படுத்தவும், மேலும் நம்பகமானதாக மாற்றவும் உதவும் என அரசாங்கம் கூறுகிறது.இது கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் அதிக நம்பிக்கையுடன் உணரவும் உதவுகிறது.தாமதம் ஏற்பட்டால் பணம் தானாகவே திரும்ப வழங்கப்படும். செயலாக்க நேரம்...
மின் தடை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அறிவிப்பு!
நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தினால் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள மேலதிக...










