கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் ஒருவன் கைது!
கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பொதி தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை பொலிஸார் பெற்று சோதனையிட்ட போது, அதனுள் 1800 போதை மாத்திரைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து குறித்த பொதி சேர்ப்பிக்கப்பட வேண்டிய விலாசத்திற்கு உரிய பெயர் உடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை...
யாழிலிருந்து கள்ளக்காதலியுடன் கொழும்பு சென்ற அரச உத்தியோக்தர்! இடையில் பஸ்சை மறித்து மனைவி தாக்குதல்!!
நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து உள்ளே புகுந்த பெண்ணும் 20 வயதான யுவதியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து பஸ்சை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த தாயும் மகளுமே நெடுங்குளம் சந்திப்பகுதிக்கு அருகில் வைத்து பஸ்சை மறித்து அரச உத்தியோகத்தரையும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளார்கள். பஸ்சில் தாக்குதலுக்கு உள்ளான அரசஉத்தியோகத்தரையும் பெண்ணையும் நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சொகுசு...
இங்கிலாந்தில் 55 வயது பெண் மருத்துவ நிபுணர் அச்சம்பாள் மீது கணவன் சந்தேகப்பட்டு நடந்த கொலை! கணவர் பிடிபட்டது எப்படி?
இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, பிரபல மலையாள மருத்துவர் அச்சம்மா ஜானின் 58 வயதான கணவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் திறமையான முன்னாள் மாணவியாகவும், இங்கிலாந்தின் முன்னணி மருத்துவராகவும் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை, மில்டன் கெய்ன்ஸில் உள்ள வூல்வர்டன் மற்றும் ஈஸ்ட் மூர் டிரைவில் அமைந்துள்ள தம்பதியரின் வீட்டில் வைத்து கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டிலிருந்து அவசர உதவி கோரி செய்தி வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அச்சம்மா ஜான்...
பழி வாங்கப்பட்டாரா யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா?
யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் போதைப்பொருள் (ஹெரோயின்) தொடர்பான வழக்குகளை விசாரித்து, ஒரு கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றவாளிகளுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை போன்ற அதிரடித் தீர்ப்புகளை வழங்கி வந்த மாண்புமிகு நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று மலையகம் பதுளைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார். 2007ஆம் ஆண்டு...
பிரான்சில் பயங்கரம்: தம்பியைக் கழுத்தறுத்துக் கொன்று, தாயைச் சுத்தியலால் தாக்கிய 16 வயது சிறுவன்!
பாரிஸ் நகரின் 19-வது வட்டாரத்தில் (19e arrondissement) நடந்த குடும்ப வன்முறைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது 14 வயது தம்பியைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, பெற்ற தாயையும் சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளான். கடந்த மே 25 திங்கட்கிழமை நள்ளிரவு தாண்டி (செவ்வாய்க்கிழமை அதிகாலை) சுமார் 3:10 மணியளவில், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த 16 வயது சிறுவன், தனது தாயையும் தம்பியையும் கொன்றுவிட்டதாகக் கூறித் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளான். தகவலறிந்த காவல்துறையினரும் அவசர...
புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்!
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. அத்துடன் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரைதிரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடும் தேடுதல் மேற்கொண்டும் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்படாதிருந்த நிலையில் இன்று...
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் தீ விபத்தில் 2 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் அறையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பதுளையிலிருந்து சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது. இச்சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தந்தை தங்கியிருந்த...
கிளிநொச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 10 வருட சிறை!
பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணவிற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் கீழ் பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில்...
மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!
மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில் நேற்று (26.05) செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். ரிஷாலா பானு (46) என்ற பெண்ணே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் மண்ணெண்ணெய் விளக்கைப் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், விளக்கை ஏற்றும் போது குறித்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயி*ரிழந்த பெண்ணிற்கு வலிப்பு நோய் தொடர்ச்சியாக இருந்து வந்ததாகவும் சம்பவத்தின் போது அவரது கணவர் மற்றும் மூன்று...
பிருத்தானியாவில் 31 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண்ணின் அதிரடி! கடைக்குள் கள்ளர்களுக்கு நடந்த கதி!
பிரிட்டானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது பிரிட்டானியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர் கம்ஷா சிவகரன் என்ற 31 வயதுப் பெண். இவரது துணிகர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் வடக்கு ஷீல்ட்ஸ் (North Shields) பகுதியில் கடை ஒன்றை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக நடத்தி வருகிறார். தனியாக இருக்கும் தன்னை எளிய இலக்காகக் கருதி, கடந்த நான்கு வருடங்களாகச் சில சமூக...










