அனைத்தும் ...
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
LATEST ARTICLES
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தவன் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன், நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று (14) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில், கோப்பாய் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். இதன்போது அவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றிலிருந்து QR முறையில் எரிபொருள் விநியோகம்! QR பெறுவது எப்படி?*
இலங்கையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் QR முறையில் மட்டுமே இன்றிலிருந்து எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் http://fuelpass.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். 2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள். 3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும். 4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile...
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இன்றைய (12.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள்...
இன்றைய (11.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில்...
கடந்த வருடம் மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் 62 கோடியை சுருட்டிய கில்லாடிகள்! பொலிசார் அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட மோசடிகள் மூலம் சுமார் 62 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் , மோசடிகாரர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில். கடந்த ஒரு வருட கால பகுதிக்குள், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக, இணையக் குற்றங்கள் ஊடாக, காணி விற்பனை உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக 225 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200...
கலைச்செல்வம் ஐயரின் மனைவியுடன் கிருஷ்ணகுமார் ஐயர் தகாத உறவு! நயினாதீவு ஐயர் வெட்டிக் கொலையின் பின்னணி!!
நயினாதீவு தெற்கு பிள்ளையார் கோவில் பூசகர், அதே பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஆலய பூசகரை நெஞ்சில் உதைந்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் கிருஷ்ணகுமார் (வயது) என்ற பூசகரே இன்று மாலை 5 மணியளவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த பூசகரின் மனைவியுடன் உயிரிழந்த பூசகர் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த முருகேசு கலைச்செல்வம் என்ற இந்த பூசகர் வாமதேவ கைலாசபாணு குருக்களின் வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டில் முருகன் கிருஷ்ணகுமார் உறங்கிக்கொண்டிருந்த...
யாழில் முஸ்லீம் பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த ரவுடிகளுக்கு நடந்த கதி!
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பள்ளிவாசலை அண்டிய பகுதியில் இரு இளைஞர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒருவர் மற்றையவரை வாளால் வெட்ட முற்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிய இளைஞன் , அருகில் இருந்த பள்ளிவாசல் ஊடாக தப்பியோடியுள்ளார். அதன் போது , குறித்த இளைஞனை வாளுடன் துரத்தி வந்த...
இன்றைய (10.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில்...
யினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்தது! ஒரு குருக்கள் பலி!
யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும்...












































