Home செய்திகள் அர்சுனா எம்பியின் காணிக்குள் நுளைந்த பெண்கள் உட்பட 5 பேரை சிறைக்குள் தள்ளிய அர்சுனா! பாதுகாப்பிற்பாக...

அர்சுனா எம்பியின் காணிக்குள் நுளைந்த பெண்கள் உட்பட 5 பேரை சிறைக்குள் தள்ளிய அர்சுனா! பாதுகாப்பிற்பாக துவக்கை தூக்கிய பரபரப்பு காட்சி! வீடியோ

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர்.

நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, எதிரே நின்ற பெண்கள் எவ்வித ஆயுதங்களுமின்றி கைகளை வீசிப் பேசிக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டமையானது பொதுமக்களுக்கு ஆபத்தானது எனப் பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், அந்தத் துப்பாக்கி இதுவரை மீளப் பெறப்படவில்லை. இவ்வாறான நிலை தொடருமானால் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது அர்ச்சுனாவின் பேஸ்புக் பதிவு
பாம்பு காணிக்குள் உட்புகந்த அம்மா ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்..
உங்களுடைய காணி உங்களுடையதாக இருந்தால் அதற்குரிய சட்டரீதியான சகல ஆவணங்களும் உறுதிகளும் உங்களிடம் இருந்தால் நீங்கள் போலீசாரை நாடலாம். அதன் பின்னர் கௌரவ நீதிமன்றத்தை நாடலாம்.
இவை இரண்டுக்கும் நான் அடிபணிந்தவன்.
கௌரவ நீதிமன்றம் கட்டளைகளை இட்ட பின்னர் அதே கட்டளைகளுக்கு அமைய கௌரவ பிரதேச சபை தவிசாளரின் உத்தரவு ஒன்றினை சிரம் மேல் கொண்டு இன்றைய தினம் நான் என்னு டைய சொந்த காணிக்குள் உட் புகுந்த போது அதையும் செவிமடுத்தாது நீதிமன்றத்தை அவமதித்து என்னை தனிப்பட்ட ரீதியில் பாராளுமன்ற உறுப்பினரின் காணி என்றும் பார்க்காது ஒரு சிலர் கூத்தடிப்பதனால் அவர்களை நீதிமன்றம் நாளை கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது
நீதிமன்றம் அதை பார்த்துக் கொள்ளும்
நன்றி
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply