சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
மாதா பிதா இவர்களுக்கு அடுத்ததாக இவர்களை போன்று பிள்ளைகள் இடத்தில் குரு இருக்க வேண்டும் என்பது நம்பிக்கையாக நியதியாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் அவை தற்போது மாற்றம் கண்டுள்ளது.
அண்மையில் கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் ஐந்தாம் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
கொழும்பு இராமநாதர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிற்கும் கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை துஷ் – பிரயோகத்தித்திற்கு உள்ளாக்கினார். இது தொடர்பாக பாடசாலை சமூகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆசிரியரை காப்பாற்றினார்கள்.
இந்த விடயம் தொடர்பில் மாணவிக்கு மன அழுத்தம் மற்றும் அவமானம் ஏற்பட்ட நிலையில் மாணவி விரக்தியடைந்த நிலையில், பாடசாலை நிர்வாகமும் ஆசிரியருக்கு துணை நின்றதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் இருந்த சமயத்தில் குறித்த மாணவி மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் ஐந்தாம் மாடியில் இருந்து தற் கொலை செய்து கொண்டார்.
குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இதற்கு முழுப் பொறுப்பும் பாடசாலை சமூகமே ஆகும். இவ்வாறு குறித்த பாடசாலையில் இது தொடர்பில் பல்வேறு மாணவர்களும் பாதிப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரகள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான சம்பவம் இலங்கை முழுவதுமாக உள்ள சில பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் சில விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் உங்களது பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்து விடுவோம் என்று மிரட்டும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான விடயம் மறைக்கப்பட்டு வருகின்றது.
ஒட்டு மொத்த பெற்றோர்களுகளும் தங்களது பெண் பிள்ளைகளின் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள், பாடசாலை முடிந்து வரும் பிள்ளகைளிடம் அன்றைய நாள் நிலைமை பற்றி கலந்துரையாடல் செய்யுங்கள்.
தரம் 11ல் கல்வி பயிலும் மாணவிக்கு நடந்த சம்பவம் போன்று பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறு நடாக்காது இருக்க அனைவரும் முன்வாருங்கள். குறித்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனையை கல்வி சமூகம் வழங்காவிடில் கல்வி சமூகமும் பாலியல் சமூகமாக மாறுவதற்கு வழிவகுத்து வருவது தெட்டதெளிவாக விளங்குகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. குறித்த ஆசிரியருக்கும் பொலிஸாருக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா எனும் சந்தேகம் எழுகிறது.
குறித்த ஆசிரியருக்கும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தண்டை வழங்கும் வரை மற்றும் இவர்கள் திருந்தும் வரை இதை பகிர்ந்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.