வடமராட்சி கம்பர்மலையில் நண்பர்களுடன் கிணற்றில் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பலி !
கிணற்றில் நண்பர்களுடன் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
நெற்கொழு கழுகு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை 2:00 மணியளவில் கிணற்றில் ஏழு நண்பர்களுடன் நீராடிய போது குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது ,
கம்பர்மலையை சேர்ந்த நிரஞ்சன் நிரக்சன் வயது 17 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைககப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













