கிளிநொச்சியில் 22 வயதான அருள்வேந்தன் தற்கொலை! அடுத்தடுத்து தமிழர் பகுதியில் நடக்கும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?

0

கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துள்ளார். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 தற்கொலைப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை தமிழர் பிரதேசங்களில் இளவயது தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்களை அறிந்து இளவயதுடையவர்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ன.

இன்றைய (01.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை...

யாழில் 8 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம்! கைது செய்யப்பட்டவன் யார் தெரியுமா?

0

யாழ்பாணம் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் நாணயக் குற்றியுடன் வெளியே வந்த எலும்புக்கூடு!

0

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது,. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் நான்காம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டு அகழ்ந்து...

கனடாவில் வசித்து வந்த மனோகரன் வவுனியாவுக்கு வந்த போது மரணம்! காரணம் எ்ன்ன?

0

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதுஇ அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில...

வெளிநாட்டில் 2 பிள்ளைகள்! யாழில் கமலேஸ்வரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! கமலேஸ்வரியின் சடலத்திற்கு அருகில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டது இதுதான்!

0

யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில்  இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய  கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார். இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதன்போது அயலவர்கள் அங்கு...

இத்தாலியில் பெண் ஒருவரை ஏமாற்ற முற்பட்ட இலங்கை இளைஞனை வீட்டுக்குள் பதுங்கியிருந்து சினிமா பாணியில் பிடித்த இத்தாலிப் பொலிசார்! நடந்தது என்ன?

0

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவரை ஏமாற்றி பணம் மற்றும் தங்க நகைகளை பறிக்க முயன்ற 36 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், குறித்த இளைஞர் தன்னை 'மாஸ்கோவா' (Moscova) பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு மூதாட்டிக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், அதற்காக வீட்டில் உள்ள பணம் மற்றும் தங்க நகைகளை ஒரு இடத்தில் பாதுகாப்பாக எடுத்து...

கிளிநொச்சியில் மின சூறாவளி! பிடுங்கி எறியப்பட்ட கூரைகள்! வீடியோ

0

இன்று பிற்பகல் பெய்த கடும் மழையும் காற்றும் காரணமாக பரந்தன் பொதுச் சந்தை சேதமடைந்துள்ளது. புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் காற்றினால் சந்தையின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிரடித் திருப்பம் ; திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுமா?

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்தப் பயணத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:- தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாவிடம் நேரடி விசாரணைகளை முன்னெடுப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அஸாத் மௌலானாவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் திடுக்கிடும் வெளிப்படுத்தல்கள் குறித்து...

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவத்தின் தொடர்ச்சி! அதிகாரி தவறான முடிவு எடுத்து பலி!

0

ஹேக்கர்களால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹக்கர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர், குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.