தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்!
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட இருந்தது. அதன் போது, காணி உரிமையாளர்கள் "காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்" என எழுத்தில் உறுதி மொழி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரி இருந்தனர். அதற்கு இவ்வாறான உறுதிமொழிகளை அதிகாரிகளாக நாம் எழுத்தில் வழங்க முடியாது அதற்கான அதிகாரங்கள் எம்மிடம் இல்லை...
யாழில் ஆசிரியைகள், மாணவிகளின் இரகசிய புகைப்படங்கள் வெளியாகின! 17 வயதான 3 மாணவர்கள் கைது!!
சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை 'செயற்கை நுண்ணறிவு' (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மூன்று மாணவர்கள் கைது அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 வயதுடைய...
யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ
யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ
தமிழர் தாயகத்தில் தொடரும் துயரம்: கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு! எதற்காக இந்த முடிவு எடுத்தான்?
கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இயன்முகிலன் ( வயது-20 ) நேற்று திங்கட்கிழமை (27.04.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மிகவும் துடிப்பான இளைஞனாக அறியப்பட்ட குறித்த இளைஞனின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தாயகப்பகுதியில் இளவயது தற்கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
யாழில் நீதிமன்றத்திற்கு சென்ற மனைவி, அவளது சகோதரன் மீது கணவன் நடு வீதியில் மறித்து கத்திக்குத்து! சாவகச்சேரி சம்பவப் பின்னணி இதுதான்! CCTV வீடியோ
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று (27) இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரனும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மறைந்திருந்த கணவன், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை...
இன்றைய (28.04.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச்...
அம்பாறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கு மாட்டுச் சாணம் பூசி கத்தியால் வெட்டியவருக்கு நடந்த கதி!
அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது. கள்ளியந்தீவு பகுதியைச் சேர்ந்த, மதுபோதைக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றி வரும் அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமை (24)...
யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் நடு வீதியில் சினிமாபானியில் நடந்த வாள் வெட்டு! 2 பேர் படுகாயம்! வீடியோ
யாழ் சாவகச்சேரியில் இன்று மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளார்கள். மோட்டர் சைக்கிளில் வந்தவர்களை நடுவீதியில் நின்று சினிமாப்பாணியில் குத்திக் கிழித்த பரபரப்பு காட்சிகள் இதோ
அருச்சுனா இராமநாதன் எம்.பி 29 ம் திகதிவரை சிறைக்குள் அடைப்பு! எம்.பியின் கைத் தொலைபேசியில் சர்ச்சை வீடியோக்கள்?
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக...
யாழில் 15 வயதுச் சிறுமிக்கு ஒரே நேரத்தில் 2 காதலர்கள்! ஒருவனுடன் ஓடிய பின் மருத்துவப் பரிசோதனையில் மாட்டுப்பட்டது எப்படி? மற்றைய காதலன் கைது!
ரிக்ரொக் காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி பொலிசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கெனவே இன்னொரு காதலனால் பா லிய ல் வல் லுறவு க்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட #மாதகல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரிக்ரொக் மூலம் அறிமுகமான, நெல்லியடி பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவருடன், 15 வயதான சிறுமி ஓட்டம் பிடித்துள்ளார். நெல்லியடி பொலிசாரின் உதவியுடன் அந்த ஜோடியை இளவாலை பொலிசார் கைது செய்தனர். சிறுமியை வீட்டிற்கு அழைத்து...










