சற்று முன் அருச்சுனா எம்.பி யாழ் இளவாலைப் பொலிசாரால் கைது!! துப்பாக்கி நீட்டிய காரணமா?

0

சற்று முன் யாழ்ப்பாண எம்.பி அருச்சுனா இளவாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதே நேரம் அவரது துப்பாக்கியும் பொலிசாரால் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றத.மேலதிக விபரங்கள் விரைவில்...

கிளிசொச்சியில் கீழே கிடந்த ATM அட்டையை எடுத்து 7 மணித்தியாலத்திற்குள் 64 ஆயிரம் ரூபாவுக்கு சாராயம் வாங்கி குடித்து மகிழ்ந்த பிரதேசசபை ஊழியன் பிடிபட்டது எப்படி?

0

கிளிநொச்சி இடம்பெற்ற இந்தச் சம்பவம், இன்றைய இலத்திரனியல் யுகத்தில் வங்கி அட்டைகள் மற்றும் பணப் பரிமாற்றம் குறித்து நாம் எவ்வளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். உழைப்பால் உயர்ந்து வரும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் பணத்தை, கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் மதுபானத்திற்காகச் செலவிட்ட விதம் சமூகச் சீரழிவின் உச்சமாகும். கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் தேனீர் கடை வைத்து கஷ்டப்பட்டு நெருப்புக்குள் நின்று உழைக்கும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் வங்கி அட்டையை அவர் தொலைத்துவிட்டார். (ATM Card) அதனை கண்டெடுத்த...

யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

0

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ஒழிப்பு நடவடிக்கையாக பொலிஸார் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதி சோதனை நடவடிக்கை, போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ,போதைப்பொருளை அடிமையானவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலான சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னெடுத்த வேளை , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட...

மன்னார் விடத்தல் தீவில் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சுவின்சன் மரணம்! ஏன் இவ்வாறு முடிவெடுத்தார்?

0

மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரன் சுவின்சன் (றஜி ) 26/4/2026 ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.  இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது. இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டியின் சிறந்த ஒரு பின்கள வீரராக செயல்பட்டு சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த சுவின்சன் எதற்காக இவ்வாறான முடிவினை எடுத்தார் என்பது இன்னும் அறியப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இவ்வாறு பலியாவோரின் எண்ணி்க்கை திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (27.04.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று கடுமையான சூழ்நிலைகளில் கூட முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி செய்வோரால் இருந்து வந்த காரிய தடை நீங்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை ரிஷபம் இன்று பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன வாக்கு பஞ்சமாதிபதி புதன் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரத்தில் இருந்த...

கிளிநொச்சியில் ஒன்றரை வயது குழந்தையை 50 ஆயிரத்திற்கு விற்க முற்பட்ட தாயும் ஆணும் பிடிபட்டது எப்படி?

0

ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்  மற்றும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில், குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத குழந்தை பரிமாற்றம் தொடர்பான இந்த நடவடிக்கை உடனடியாக முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை தற்போது பாதுகாப்பாக பொலிஸ் காப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிரை, அதுவும் பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்ற இந்த செயல் அப்பகுதி மக்களிடையே...

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – இளைஞன் பலி!

0

கலென்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உபுல்தெனிய, பஹலகம ஏரி அணையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அணையில் இருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என கலென்பிந்துணுவெவ பொலிஸார் தெரிவித்தனர். விவசாய நடவடிக்கைகளுக்காக சில தினங்களுக்கு முன்னரே குறித்த இளைஞர் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளார். அவர் உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரது உழவு இயந்திரத்தில் சாரதியாகப் பணியாற்றி அங்கேயே தங்கியிருந்துள்ளார். விபத்து நடந்த...

யாழ் பிரபல மருந்தகத்தின் “சேல்ஸ் ரெப்” இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!

0

யாழில் பிரபல  மருந்தகத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் போதை மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொக்குவில் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சிற்றி எனும் பெயருடன் கூடிய மருந்தக விற்பனை முகவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அர்சுனா எம்பியின் காணிக்குள் நுளைந்த பெண்கள் உட்பட 5 பேரை சிறைக்குள் தள்ளிய அர்சுனா! பாதுகாப்பிற்பாக துவக்கை தூக்கிய பரபரப்பு காட்சி! வீடியோ

0

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர். நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த...

யாழில் நீண்ட காலமாக தகாத செயல் செய்து வந்த குருநர் பெற்றா கைது! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி!

0

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய குருநகர் பெற்றா என அழைக்கப்படும் ஒருவர் நேற்று (24) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...