யாழில் மணல் கொள்ளையர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்!! ஒருவன் படுகாயம்!!
யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர். இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாலாவி தெற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன்...
பெற்றோல் பௌசரை முந்திச் செல்ல முற்பட்ட இளைஞன் தலை நசுங்கிப் பலி!! CCTV Video
பெட்ரோல் ஏற்றி சென்ற பௌசரை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞன் சில்லுக்குள் சறுக்கி விழுந்து தலை சிதறி உயிரிழப்பு.. கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மல்வானை இளைஞன் உயிரிழந்துள்ளார். மழை காரணமாக முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் சறுக்கியத்தில் அருகில் வந்த பௌசருக்குள் விழுந்ததில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு மீட்பு!!
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான...
சுவிசில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது!!
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கணிசமாகக் கட்டுப்படுத்த மத்திய கவுன்சில் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் நடைமுறைக்கு உட்பட்டவர்கள் அல்லது தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் பொதுவாக இனி நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மூன்றாம் நாடுகளுக்குக் கூட அவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) அனுமதி வழங்கும். மத்திய கவுன்சில் புதன்கிழமை அறிவித்துள்ள பவிதிமுறைகளில் பல திருத்தங்களுக்கான ஆலோசனை செயல்முறையைத் திறந்துள்ளது. 2021 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத் தேவைகளை செயல்படுத்துவதே இதன் நோக்கம். உக்ரைனில் இருந்து வரும்...
பிரான்சில் வசிக்கும் யாழ் நல்லூரைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் சூரன் செய்த செயல்!!
பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் சூரன், தனது "பாரிஸ் முதல் யாழ்ப்பாணம் வரை" என்ற பயணத்தை இன்று 22-10-2025 நிறைவு செய்துள்ளார் செப்டம்பர் 1, 2025 அன்று பாரிஸில் இருந்து புறப்பட்ட இவர், 13 நாடுகள் ஊடாக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்தை தனது மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
போதைப்பொருள் கடத்திய 805 ஆண்களும் 21 பெண்களும் 5 பாடசாலை மாணவர்களும் துாக்கில் தொங்குவதற்கு ஆயத்தமாக உள்ளார்கள்!! ஜகத் வீரசிங்க
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். தூக்கிலிடப்பட 805 ஆண்கள், 21 பெண்களும், 5 பாடசாலை மாணவர்களும் உள்ளனர். இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில்...
யாழ் மாநகரசபை உறுப்பினரின் மகன் கத்தி, போதைப்பொருளுடன் கைது!!
யாழில் நேற்றிரவு 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் சுதர்சன் இந்த...
யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் அன்ரனி ஜோசேப் பலி!!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார். உடனடியாக இன்னொரு படகு மூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு...
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிட முடியாது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை!! பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு.
பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான வெளியீடுகளுக்கு ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வழக்குகள், புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள விசாரணைகள் அல்லது பொலிஸாரின் நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான விடயங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்து ஊடகங்களில் வெளியிடவும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள்...
யாழில் மி்ன்சாரம் தாக்கி தேவபாலன் மரணம்!!
யாழில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்காக வயரினை செருக முற்படும்போது அவர்மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.










