சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!
பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது.. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ் ஹமூத் எனும் மாணவன் மோட்டார் சைக்கிளினால் விபத்துக்குள்ளாகி பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காலமானார். தற்போது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் <img class="alignnone size-medium wp-image-4642" src="https://tamil.tamiliz.com/wp-content/uploads/2026/06/F735C0AE-227B-4B81-8EFB-9B3A386BF529-225x300.jpeg" alt="" width="225" height="300"
மகிந்த தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும்! சரத்பொன்சேகரா குமுறல்!
மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொன்சேகா மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவுதான் பெருமை அடித்துக் கொண்டாலும், மகிந்த வுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்யும் தனது கடமையை, அதனை நிறைவேற்றும் நாளில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்....
தனது குளியல் காட்சியை மாணவியின் தாய்க்கு அனுப்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்கும் பிரபல வைத்திய நிபுணரின் மகன்!
கொழும்பில் கௌரவமான கல்லுாரியில் கற்கும் 16 வயதான தமிழ் மாணவன் ஒருவன் அதே வயதான கொழும்பில் பிரபல தமிழ் பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவிக்கு வட்சப் மூலம் தனது நிர்வாண குளியல் வீடியோவை அனுப்பியுள்ளார். குறித்த வீடியோ மாணவியின் தாயாரின் வட்சப்பிற்கு அதிகாலை 4.30 மணியளவில் அனுப்பட்டுள்ளது. குறித்த மாணவி அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கம் உடையவர் என்றும் வட்சப்பில் ஒன்லைன்னில் மாணவி அந்த நேரங்களில் இருப்பதை அறிந்தே மாணவன் குறித்த வீடியோவை அனுப்பியுள்ளான் எனவும் தெரியவருகின்றது. மாணவியின் தாயாரின் கண்களில் அகப்பட்ட...
புத்தளம் – அநுராதபுரகோர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தாயும், மகளும் அடுத்தடுத்து பலி!
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், அவரது இளம் மகளும் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜீனி மகேஷிகா ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த...
கொழும்பில் கணவன், மனைவியை சீரழித்து கொன்று கால்வாயில் புதைத்தவன் பிடிபட்டது எப்படி?
கிராண்பாஸ் பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போயிருந்தனர். இதுகுறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்தபோது, தனிப்பட்ட தகராறு காரணமாக அயல் வீட்டு...
இன்றைய (05.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட...
கட்டுநாயக்காவில் இந்த அதிகாரி என் மருமகளுக்கு செய்த கேவலம்! அநுரா வந்தும் திருந்தவில்லை!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் இந்த ஊழல් சேவகர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் ✊ என்னுடைய 21 வயது மருமகள், தன்னுடைய தாயாரைப் பார்ப்பதற்காக விடுமுறைக்காக டிசம்பர் 19 ஆம் தேதி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள். அவளிடம் மின்னணு நுழைவு அனுமதிச்சீட்டு இருந்தது; ஆனால் தற்செயலாக தன்னுடைய பிறந்த தேதியை ஏப்ரல் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் மே என்று தவறாக பதிவு செய்திருந்தாள். அதைக் கண்ட குடியேற்ற அதிகாரி, பிறந்த மாதத்தைத் திருத்துவதற்காக 50 பவுண்டுகள் செலுத்துமாறு அவளிடம் கேட்டார். பணத்தைக் கொடுத்த பிறகு அவள் ரசீது...
யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை துண்டிப்பு! பொலிசார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு! நடப்பது என்ன?
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து - நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் மருத்துவத் தவறு...
யாழ் பல்கலை சிரேஷ்ட சித்தமருத்துவ விரிவுரையாளர் தயாளினி கொலையில் இன்னொரு திருப்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 16ம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன்...
ஆட்டோவுக்கு மேல் விழுந்த மரம்! மாணவன் உட்பட மூவர் பலியான நாவலப்பிட்டி விபத்து..வீடியோ
இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.










