யாழில் நீண்ட காலமாக தகாத செயல் செய்து வந்த குருநர் பெற்றா கைது! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி!
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய குருநகர் பெற்றா என அழைக்கப்படும் ஒருவர் நேற்று (24) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...
இன்றைய (26.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய...
முல்லைத்தீவு நகர் பகுதியில் ஹோட்டலில் றூம் போட்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஹோட்டல் முகாமையாளரும் கைது!
முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு ஒத்தாசை புரிந்து அவனுக்கு அறை வாடகைக்கு கொடுத்த விடுதி முகாமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம் வெளியாகியது!!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்... திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள். பள்ளிக்கல்வி முடியும்வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். இதுபோன்ற குழந்தைகளின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.
கனடாவில் தனது உடல் உறுப்புக்களை தானம் செய்து விட்டு இறந்த யாழ்ப்பாண இளைஞன்! 6 பேருக்கு உயிர் தானம்
கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே உயிரிழந்தவர்.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாலை, Queen Street மற்றும் Kennedy Road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த Peel பிராந்திய பொலிஸார், மயக்க...
மாத்தளையில் தந்தையை கொலை செய்த மகன்! எதற்காக கொலை?
மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 64 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக...
பழப் பொதிகளுக்குள் மறைத்த 25 மில்லியன் ரூபா போதைப்பொருள் — புகைப்படக் கலைஞர் பிடிபட்டது எப்படி?
பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சோதனையின்போது அவரது பயணப் பொதியில் மிக நுணுக்கமான முறையில் மறைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட...
கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி அக்சயா மரணம்! ஏன் அந்த முடிவை எடுத்தார்?
கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த...
இன்றைய (25.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதன் சஞ்சாரம் ராசிக்கு 2ல் இருப்பதால் பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும்....
அமெரிக்காவில் 29 வயது இலங்கை குடும்பப் பெண் பரிதாபமாக பலி! நடந்தது என்ன?
புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடந்த வருடம் கணவருடம் அமெரிக்கா சென்ற இலங்கை பெண் விபத்தில் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஹஷினி ஹேரத் என்ற 29 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தெற்கு நோக்கிச் சென்ற லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, ஹஷினி ஹேரத் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது. இந்த விபத்தில் ஹஷினி ஹேரத்...









