களுத்துறையில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி இழுத்துச் செல்லப்பட்டு பலரால் வல்லுறவு!
களுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை - இங்கிரிய, ஹைகம் (Raigam) மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஆற்றுக்குக் குளிக்கச் சென்றபோது, வழியில் மறைந்திருந்த இனந்தெரியாத கும்பல் அவரை வழிமறித்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதன்போது, அவர்கள் மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த இரண்டு சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தனிமையில் வசித்து வந்த பெண்ணை இரவிரவாக சித்திரவதை செய்து கொன்றது யார்? மோப்பநாய்கள் சகிதம் பொலிசார் தேடுதல்!
பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (23) மாலை பலாங்கொடை பிரதான நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும், அது தோல்வியில் முடிவடைந்தது. உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான...
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் 14 வயதுச் சிறுமி மீது சேட்டை புரிந்த சிப்பாய்க்கு நடந்த கதி!
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் கடந்த 20 ம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பயணித்துள்ளார். அதேவேளை புனாணை...
கொழும்பு 7 ல் யுவதி குளிப்பதை தொலைபேசியில் பதிவு செய்து அவளது நண்பிக்கு அனுப்பிய தமிழ் காவாலிக்கு நடந்த கதி!
அண்டை வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாகக் காணொளி பதிவு செய்து, அதனை அப்பெண்ணின் தோழிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை, வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிபதி உத்தரவிட்டார். கொழும்பு 7 பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது குளியலறையில்...
இன்றைய (24.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக்...
கனடா பொலிசாரின் அலட்சியத்தால் யாழ்ப்பாண இளைஞன் பலி! நடந்தது என்ன?
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்: கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி(30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார். சிகிச்சை அளிக்க தாமதம்.. இதன்போது, விரைந்து வந்த பீல்...
சற்று முன் சாவகச்சேரி நுனாவிலில் விபத்து! ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராஜசிங்கம் வீதி குருநகர் பகுதியை சேர்ந்த 44 வயதான செல்வம் றொபின் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியின் சாரதியை மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான்...
யாழில் 17 வயது பயஸ் சுட்டுக்கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு!
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்துமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார். அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி ஹயஸ் ரக வாகனத்தை செலுத்தினார் என பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , 17 வயது சிறுவனான...
கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 65 வயதான மனைவியை விவாகரத்துச் செய்கின்றார் 69 வயது கணவன்! எதற்காக?
யாழ் நகர்ப்பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான 8 பரப்பு காணியை தமது பிள்ளைகளுக்கு பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி தனது மனைவியை விவாகரத்துச் செய்ய முற்பட்டுள்ளார் 69 வயதான தர்மராசா. தர்மராசாவுக்கு 2 ஆண், 3 பெண் பிள்ளைகளுமாக 5 பிள்ளைகள். அனைவரும் திருமணம் முடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுடன் வாழ்கின்றாா்கள். தா்மராசாவும் அவரது மனைவியும் கடந்த 16 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவா்களை கனடாவுக்கு அழைத்தது அவர்களது மூத்த ஆண் பிள்ளை. தர்மராசா...
சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி சிதறிய ஆட்டோ! ஒருவர் பலி . ஒருவர் படுகாயம்…வீடியோ
சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.










