‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சீன அரசாங்கம் அவசரகால நிவாரண உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர், சி ஷென்ஹொங்கிடமிருந்து இந்த நன்கொடையை தாம் பெற்றுக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இலங்கையின் நண்பனாக இருக்கும் சீன அரசாங்கத்துக்கு, இந்தச் சவாலான நேரத்தில் வழங்கிய நிலையான ஆதரவுக்காக இலங்கை சார்பில் ஆழமான நன்றியைத் தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













