நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் “நெடுந்தாரகை” பயணிகள் படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (2025.12.10) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15ம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகளலால் மேற்படி சடலம் மீட்கப்பட்டது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













