இன்றைய (20.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு கோளாறை ஏற்படுத்தும். எந்த காரியம்...

வரலாறு காணாத உலகளாவிய இணைய முடக்கம்? -ஈரான்-அமெரிக்கப் போர்-இணையம் இல்லாத ஒரு நாளை கற்பனை செய்து பாருங்கள்!

0

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பதற்றமான சூழ்நிலையால், உலக நாடுகளை இணைக்கும் கடலடி கேபிள்கள் (Submarine Cables) பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் நடக்கும் தொடர் மோதல்களால், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான இணைய தொடர்புகள் எந்த நேரத்திலும் துண்டிக்கப்படலாம் என சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மோதல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத்துறையையும் அச்சுறுத்தி...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்கப்பட்ட காட்சிகள்! வீடியோ!

0

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார் கொழும்பு பல்கலைக்கழகத்தைச்...

யாழில் மாணவிகளை பேஸ்புக்கில் அவதுாறு செய்த மாணவன்!! நியாயம் கேட்ட சென்றவர்களை துரத்தித் துரத்தி வெட்டி அப்பன்!! இருவருக்கும் நடந்த கதி என்ன?

0

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவரது புகைப்படம்...

இன்றைய (18.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க...

ஈரான் ட்ரோன்களுக்கு மரண அடி கொடுக்க ஆயத்தமாகும் அமெரிக்கா! வரலாற்றில் முதல்முறை! போர்க்களத்தில் லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய அமெரிக்க கடற்படை!

0

அமெரிக்க கடற்படை ட்ரோன்கள் மற்றும் சிறிய வான்வழி இலக்குகள் போன்ற நவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட உயர் ஆற்றல் கொண்ட லேசர் அமைப்பைச் (High-energy laser system) சோதித்துள்ளது. HELIOS என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, 'யுஎஸ்எஸ் பிரெபில்' (USS Preble) கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இது இலக்குகளை உடனடிாக முடக்க அல்லது அழிக்க 60 கிலோவாட்டிற்கும் அதிகமான நேரடி ஆற்றலைச் செலுத்தக்கூடியது. பாரம்பரிய ஆயுதங்களைப் போலன்றி, லேசர் அமைப்புகள் கப்பலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சார்ந்திருக்கின்றன. இதனால் பௌதிக வெடிமருந்துகள் அல்லது மறுஏற்றம் (Reloads) தேவைப்படாமல்...

யாழ்பாணத்தில் விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!

0

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மணியந்தோட்டத்தை சேர்ந்த அண்ணன் தங்கை பலி. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை!

0

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த...

பேருவளை பகுதியில் போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!

0

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். அந்தப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு...

மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை – இலங்கையை அதிரவைத்த ‘தங்கச் சங்கிலி’ கொள்ளை பின்னணி!

0

பெற்ற தாயே மகனின் போதைப்பொருள் பாவனைக்காகவும், கொள்ளைச் சம்பவங்களுக்கும் துணையாக நின்ற அதிர்ச்சிச் சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔍​நடந்தது என்ன? இலங்கையின் பல பாகங்களில், குறிப்பாக வென்னப்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் கொள்ளைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வென்னப்புவ குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த 13ஆம் திகதி களுத்துறை பகுதியில் வைத்து 53 வயதுடைய பெண் ஒருவரை அதிரடியாகக் கைது செய்தனர். 🔙​அதிர்ச்சியூட்டும்...