ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – 2026
மேசம் அன்பும், அரவணைப்பும் கொண்டு விளங்கும் மேச ராசி வாசகர்களே! இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சனி அமர்வதும் உங்களின் உழைப்பிற்கும், தனி திறமைக்கும் சவாலாக அமையும். இந்த ஆண்டு இரண்டு பெயர்ச்சிகள் குரு மே மாதம் கடகத்திற்கு பெயர்ச்சியாவதும் ராகு / கேது நவம்பர் மாதத்திலும் பெயர்ச்சி அடைகிறார்கள். இனி இந்த ஆண்டு பலன் எப்படி? என்பதை பார்ப்போம் எடுத்த காரியம் நிறைவேற உங்களின் தனிப்பட்ட முயற்சிகள் வெற்றியை பெற்றுத் தரும். விரைய சனி காலங்களில் அசையாத சொத்துகள் வாங்கி...
குறுகிய கால வீடியோக்கள் மற்றும் மனநல பாதிப்பு: புதிய ஆய்வின் அதிர்ச்சி முடிவுகள்!
சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை (short-form videos) பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து பார்ப்பது, வாசிப்பு அல்லது சிக்கல்களைத்...
தினமும் வெறும் 7,000 அடிகள் நடப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்!
தினமும் சுமார் 7,000 அடிகள் நடப்பது, உங்களை ஆட்கொள்ளும் மறதி நோய், இதய நோய்கள் மற்றும் அகால மரணத்தின் அபாயத்தை வியக்கத்தக்க வகையில் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை, எவராலும் எங்கும் இதைத் தொடங்க முடியும். இயக்கமே மருந்து! அலைபேசியைத் தேய்ப்பதிலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதிலும் காலத்தைக் கழிக்கும் இந்த யுகத்தில், நடைப்பயிற்சி நம்மை மீண்டும் இயற்கையோடும், நமது சுவாசத்தோடும் இணைக்கிறது. வாழ்க்கை மிகவும் சத்தமாக இருக்கும்போது, நாம் மறந்துபோன நமது அமைதியான பக்கங்களை இந்த நடைப்பயிற்சி நமக்குத் தேடித்தருகிறது. இது...
முல்லைத்தீவில் உள்ளதைப் போல் யாழில் செய்ய முடியாதா?
இது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆண், பெண், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் தனித்தனி பொது கழிப்பிடம். இதை மாவட்ட செயலகம் அமைத்திருப்பதாகவும் அங்கே ஒரு அறிவித்தல் பலகையும் காணக்கிடைக்கிறது. முறிகண்டியில் இருப்பது போல காவலாளியோ / கட்டண கோரல் கூட அங்கில்லை. சிறப்பான பராமரித்தலோடு காணப்படும் இத்தகைய கழிப்பிட வசதி, யாழ்ப்பாணத்தில் அதிக மக்கள் கூடும் எந்த ஆலய சூழலிலும் காணக்கிடைக்காது. ஆலயங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளாலும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுதல் வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 வயது சிறுமி!
மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் ஆரம்ப பாடசாலையில் படிக்கும் ஏழு வயது மாணவியாவார். இவர் வரல்ல பகுதியில் வசித்து வந்ததுடன் சிறுமி வைத்திருந்த அளவிடும் நாடா தனது வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக மாணவி மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்.
முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் தலைகீழாக கவிழந்து கிடக்கும் கார்!!
ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காலை இன்று 27 இடம்பெற்றுள்ளது. காரில் பயணம் செய்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.
கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 84 நாட்களில் 110 சார்ஜர்கள்,...
கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 84 நாட்களில் 110 சார்ஜர்கள், 159 சிம் அட்டைகள் மற்றும் இணைய வசதிக்கான ரவுட்டர்கள் (Routers) மீட்கப்பட்டுள்ளன. சில ஸ்மார்ட் ரக தொலைபேசிகள் சிறைக்கூடங்களின் தரையினுள் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லொக்கு பெட்டி, மிதிகம ருவன், தெமட்டகொட சமிந்த மற்றும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபர் ஆகியோரின்...
சுவிசில் 240 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கோபுரம் கட்ட திட்டம்.
சூரிச்சின் ஹார்ட்ப்ரூக் பிரிட்ஜில் 240 மீட்டர் உயர கோபுரத்தைக் கட்டி, சாதனை படைக்க ஒரு கட்டிடக்கலை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சூரிச்சை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனமான ஸ்டுடியோஃபார்மா, சுவிட்சர்லாந்தின் மிக உயரமான கட்டிடமான “எலிசியம்” பற்றிய ஆய்வை சமர்ப்பித்துள்ளது. இது அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு ஹோட்டல், கடைகள் மற்றும் கலாச்சார இடங்களைக் கொண்ட 240 மீட்டர் உயரமுள்ள, பல செயல்பாட்டு கோபுரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தத் திட்டம் 612 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட ஒரு “செங்குத்து சுற்றுப்புறமாக” செயல்பட நோக்கம் கொண்டது – அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்றில்...
பிரபல பாடசாலையில் விடுதியில் உடற்கல்வி பாட ஆசிரியருடன் வசமாக சிக்கிய மூவர்!
மொனராகலை – செவனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் வைத்து போதைப்பொருளுடன் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான விளையாட்டு ஆசிரியர் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் விளையாட்டு ஆசிரியர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் செவனகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்த இளைஞனே 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










