இன்றைய (16.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண்...
அப்பாவி வாடிக்கையாளர்களை அதலபாதாளத்தில் வீழ்த்தும் டயலொக் சிம்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். நேற்று dialog office ல போய் சண்டை புடிச்சுடு வந்தது என்ன பிரச்சனை எண்டா, ஒரு சிம் ஒண்டு எடுத்து நாங்கள் phone ல போட்டு active பண்ணி இருந்தாலும், காசு போடாடி சிம் 1 மாசதால disconnect ஆகுமாம், அடுத்த 6 மாசம் கவனிகேல எண்டா சிம் அடுத்தவனுக்கு குடுத்துடுவினமாம் இன்னொன்று சொல்லுறங்கள் outgoing call போகேல எண்டாலும் sim வெட்டு படுமாம், என்ன சிக்கல் எண்டா, யோசிச்சு பாருங்கோ, ஒரு சிம் அ நம்பி தான் எங்கட privacy ஏ இருக்கு, எண்ட சிம் அ...
மனநலம் குன்றிய சிறுமிக்கு மசாஜ் செய்த பிக்குவுக்கு 10 வருட கடூழிய சிறை!
மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீது குற்றம் புரிந்தார் என்று கண்டு கொள்ளப்பட்ட பிக்குவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பில் விகாரை ஒன்றை சேர்ந்த இவர் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு எண்ணெய் மசாஜ் வழங்குவதாக காட்டி கொண்டு தவறாக நடந்தார் என்று என்பது சாட்சிகள், சான்றுகள் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் ஆனது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500000 ரூபாய் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று பிக்குவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் எந்த...
பூட்டிய வீட்டுக்குள் இரத்தக் கறையுடன் 2 வது மனைவியுடன் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்!
வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயது நபரும், அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் 55 வயது பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவியின் உடலில் இரத்தக் கறை இருப்பதாகவும், அவரது உடல் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட வீடு பல நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல் ; பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி
யாழ் போதனா வைத்தியசாலையில் அதிகளவு போதைப் பொருள் உட்கொண்ட நபர் பலி!
போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியிருந்த குடும்பஸ்தர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக, மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண...
யாழில் மாட்டுக்கள்ளர்கள் 7 பேர் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். வேலணை , புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு , சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை களவாடும் சம்பவங்களும் அதிகரித்து இருந்தது. அது தொடர்பில் பாதிக்கப்பட்ட...
கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்திற்குள் நடந்த சம்பவம்! அரச ஊழியரின் வேலை பறி போனது எப்படி?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் ஒரு பலத்த அபாய எச்சரிக்கை! கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் அலட்சியத்தால், மாகாண சபையைச் சேர்ந்த 52 வயதுடைய கள அலுவலர் ஒருவர் தனது வேலையை இழந்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில் 43 நாட்கள் சம்பளமற்ற விடுப்பு மற்றும் எச்சரிக்கையுடன் மீள வேலை பெற்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அம்பலமாகியுள்ளது! 🛑 சம்பவம் என்ன? தபால் துறையின் கோர முகம்! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் செய்யப்பட்ட 52 வயதுடைய மாகாண சபை கள...
இன்றைய (15.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு...
யாழில் பிரான்சில் இருந்து வந்த குடும்பஸ்தருக்கு மனைவிக்கு முன் ஆட்டோக்காரன் செய்த அலங்கோலம்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்குவில் கிழக்கில் ஆடியபாதம் வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு பயணியைக் கொண்டு செல்வதற்காக 3 கிலோ மீற்றர் துமுாரத்திற்கும் குறைவாக உள்ள துாரத்திற்கு 1200 ரூபா அறிவிட்டுள்ளான் போதனா வைத்தியசாலையின் முன் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள ஆட்டோக்காரன். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் தந்தையை பார்வையிடுவதற்காக பிரான்சில் இருந்து 45 வயதான குடும்பஸ்தரும் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் வந்து ஆடியபாதம் வீதியில் அருகில் உள்ள தமக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். நேற்று முன்தினம் மதிய நேர...
மயிலங்குளத்தில் கால்வாயில் கவிழ்ந்த உழவு இயந்திரத்தில் சிக்கி இளம் தந்தை பலி!
புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், கூலி அடிப்படையில் மற்றொருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தை இயக்கி வயல் உழும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வயல் உழும் பணியை நிறைவு செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வயல்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்க்குள் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதிக...









