அக்காவைக் குத்திக் கொலை செய்த தம்பி! வவுனியாவில் சம்பவம்!

0

வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.   இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம்...

கனடாவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான புதிய விதி!

0

கனடாவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான புதிய விதி ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய உங்கள் கடவுச்சீட்டு 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படாவிட்டால் உங்களுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்படும். குறித்த விதி கடந்த மார்ச் 31ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.30 Days for Free' என அழைக்கப்படும் இந்த சேவை, சேவைகளை மேம்படுத்தவும், மேலும் நம்பகமானதாக மாற்றவும் உதவும் என அரசாங்கம் கூறுகிறது.இது கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் அதிக நம்பிக்கையுடன் உணரவும் உதவுகிறது.தாமதம் ஏற்பட்டால் பணம் தானாகவே திரும்ப வழங்கப்படும். செயலாக்க நேரம்...

மின் தடை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அறிவிப்பு!

0

நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்  துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தினால் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள மேலதிக...

கணேமுல்லையில் பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!

0

கணேமுல்ல, பொல்லன வடக்கு பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடபிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடமிருந்து 12 கிலோகிராம் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோகிராம் 946 கிராம் ஹெரோயின், ஒரு மோட்டார் சைக்கிள், தராசுகள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர்...

இன்றைய (09.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம் இன்று சந்திரன் சஞ்சாரத்தால் தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை...

நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்!

0

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம் | Northern Train Services To Resume Starting புத்தாண்டு காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்தில் இந்த அறிவிப்பு வடக்கு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைட்டில் உயிரிழந்த தாய்! உடலையாவது பார்க்க உதவி கோரும் பிள்ளைகள்! நடந்தது என்ன?

0

அப்பாவின் இறுதிச் சடங்கை செய்வதற்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அம்மாவின் இறுதிச் சடங்கை செய்வதற்காகவாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரண்டு பெண் பிள்ளைகள் எதிர்பார்த்து காத்து நிற்கும் துயர சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய சிவக்கொழுந்து மீனா என்ற பெண் குவைட் நாட்டில் மாரடைப்புக் காரணமாக இம்மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்தார். குடும்ப கஷ்டம் காரணமாக இவர் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம்...

பெற்றோரே அவதானம்!! ஆட்டோச் சாரதியின் அதி வேகம்! குழந்தை மரணம்! இவ்வாறான சாரதிகளை புறக்கணியுங்கள்! வீடியோ

0

நீங்கள் பாடசாலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ குழந்தைகளை வாகனங்களில் அனுப்பும் போது அவர்களைக் கொண்டு செல்லும் சாரதிகள் தொடர்பாக விளிப்புணர்வுடன் செயற்படுங்கள். அவர்களின் நடத்தைகளை அவதானியுங்கள்.. குழந்தைகளை மட்டுமல்ல... நீங்களும் பிரயாணம் செய்யும் வாகனங்களின் சாரதிகளிடம் மிகுந்த அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.. இல்லாதுவிடின அநியாயமாக உயிர்கள் இழக்கப்படக்கூடும்....

இன்றைய (08.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்பீர்கள். உடல் சோர்வோடு பிடிமானமில்லா மனநிலையும் தான் மிச்சம் என்றிருந்தது. இனி கவலை வேண்டாம். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று உயர் படிப்புகளை நீங்கள் விரும்பும் துறையில் தொடரலாம். கலை மற்றும் நுண்கலைத் துறைகளில் தேர்ந்தெடுத்தால் சிறந்து விளங்கலாம். சற்று வருத்தமான மனநிலை இருக்கும். ஜுரம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். பொறுமை தேவை....

ஈரான் மீது இன்றிரவு அணுகுண்டு வீச ஆயத்தமாகின்றதா அமெரிக்கா? இரவு நடக்கப் போவது என்ன?

0

"ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழியும், அது மீண்டும் ஒருபோதும் கொண்டுவரப்படாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் அது நடக்கும். இருப்பினும், இப்போது நம்மிடம் முழுமையான மற்றும் மொத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் குறைவான தீவிரப்போக்குடைய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. ஒருவேளை புரட்சிகரமான மற்றும் அற்புதமான ஏதோ ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்? உலகத்தின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை இன்று இரவு நாம் கண்டறிவோம். 47 ஆண்டுகால மிரட்டிப்...