கிளிநொச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 10 வருட சிறை!

0

பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணவிற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் கீழ் பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில்...

மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

0

மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில் நேற்று (26.05) செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். ரிஷாலா பானு (46) என்ற பெண்ணே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் மண்ணெண்ணெய் விளக்கைப் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், விளக்கை ஏற்றும் போது குறித்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயி*ரிழந்த பெண்ணிற்கு வலிப்பு நோய் தொடர்ச்சியாக இருந்து வந்ததாகவும் சம்பவத்தின் போது அவரது கணவர் மற்றும் மூன்று...

பிருத்தானியாவில் 31 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண்ணின் அதிரடி! கடைக்குள் கள்ளர்களுக்கு நடந்த கதி!

0

பிரிட்டானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது பிரிட்டானியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர் கம்ஷா சிவகரன் என்ற 31 வயதுப் பெண். இவரது துணிகர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் வடக்கு ஷீல்ட்ஸ் (North Shields) பகுதியில் கடை ஒன்றை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக நடத்தி வருகிறார். தனியாக இருக்கும் தன்னை எளிய இலக்காகக் கருதி, கடந்த நான்கு வருடங்களாகச் சில சமூக...

சற்று முன் பரபரப்பு! ஹற்றனில் தம்பதியை இரட்டைக் கொலை செய்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்!

0

அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (27) செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு தப்பியோடியுள்ளார். மனோஜ் அல்லது மனோஹரன் என்றழைக்கப்படும் பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை 23 ஆம் திகதி பொதுமக்களின் உதவியோடு பொகவந்தலாவை பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை...

ட்ராக்டர் சந்திக்கு அருகில் டிப்பர் மோதி ஆட்டோ நசுங்கியது! 2 இளைஞர்கள் பலி! வீடியோ

0

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர...

இன்றைய (27.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி...

யாழில் கோயிலில் மோதல்! படுகாயமடைந்தவரின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது!

0

யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஆலய வேள்வி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்த் தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் படுகாயமடைந்த நபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...

19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!

0

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ – அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையை விற்க முயன்ற...

யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியில் நள்ளிரவில் பயங்கரம் – சொகுசு கெப் வண்டியுடன் மோதி காட்டு யானை பரிதாப பலி!

0

ஏ-9 பிரதான வீதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர விபத்தில் காட்டு யானை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சொகுசு கெப் வாகனம் ஒன்று முற்றாக நசுங்கி உருக்குலைந்துள்ளது! ​நடந்தது என்ன? இதோ முழுமையான விபத்து அறிக்கை நள்ளிரவில் வீதிக்கு வந்த எமன்! ​கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கெப் (Cab) வண்டி, திங்கட்கிழமை (25) இரவு மரதன்கடவல, தோணிகல பகுதியை கடந்தபோது இந்த அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது. ​கண்டினியூஸாக பயணித்த வாகனத்தின் குறுக்கே, திடீரென காட்டு யானை ஒன்று வீதியைக் கடக்க முயன்றுள்ளது. கண்ணிமைக்கும்...

மாணவியைக் காப்பாற்றச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி துயர மரணம்; மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

0

படல்கும்புர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் (25) மாலை கிரிந்த கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் மூழ்கியதைக் கண்ட பாடசாலை அதிபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துள்ளார். இதன்போது, அவர்கள் இருவரும் பலத்த கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் மீட்டு தெபரவெவ ஆதார...