வவுனியாவில் மருந்தகத்திற்கு முன் சைக்கிளை திருடிச் செல்லும் கொள்ளையன்! பொலிசாரின் CCTV வீடியோ
வவுனியா, கொரவப்பொத்தாணை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள மருந்தகம் (Pharmacy) ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது இளைஞர் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியை மருந்தகத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதனை அவதானித்த மர்ம நபர் ஒருவர், மிகக் குறுகிய நேரத்திற்குள் துவிச்சக்கரவண்டியைத் திருடிச் சென்றுள்ளார். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான முழுமையான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது...
இன்றைய ராசி பலன்கள் (11.04.2026)
மேஷம் இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு...
வவுனியாவில் 72 வயது முதியவர் படுகொலை! வீட்டு வாடகை தகராறே காரணம் என சந்தேகம்!
வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய நபர் ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை முதியவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த...
இலங்கையில் 63 கோடி ரூபா லொத்தர் வென்ற நபர் எவ்வாறு வந்தர் தெரியுமா? புகைப்படம் உள்ளே…
அண்மையில் மாபெரும் லொத்தர் பரிசு ரூ. 63 கோடி ஜக்பொட் பரிசை பெற்றுக் கொண்ட வெற்றியாளர் லொத்தர் சபையிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டார். மனுசன் பயத்தில மாஸ்கோடு வந்திருக்கிறார் பாருங்கோ....
அணு குண்டை விட பலமான ஒன்றை காட்டி அமெரிக்காவை கதி கலங்க வைத்த ஈரான்! நடந்தது என்ன?
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது. அதாவது, ஈரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி...
தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவன் கொலை! மாணவி கழிவறைக்குப் போன போது பின் தொடர்ந்தாராம்! பொலிசார் திடுக்கிடும் தகவல்!
ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன. எவ்வாறாயினும், அதன் பின்னர் அதே பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு...
கனரக வாகனம் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு – வவுனியாவில் சோகம்
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய பாலகுகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற...
அநுராவிடம் சென்று கூறு.. அவருக்கு நான் பயந்தவன் அல்ல!! தாய் ஒருவரை திட்டி தீர்த்த அதிகாரி! வீடியோ
அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், வயதான தாய் ஒருவரை அரச அதிகாரி ஒருவர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: அதிகாரியின் ஆவேசம்: குறித்த தாய் தனது தேவையைத் தெரிவித்து முறையிடச் சென்றபோது, அந்த அதிகாரி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். "போய் அநுரவிடம் (ஜனாதிபதி) சொல்லு.. எனக்கு அநுரவைப் பார்த்தால் பயம் இல்லை" என அவர் ஆவேசமாகக் கத்தியுள்ளார். அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரிகள்: நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும்,...
லண்டனில் வீடுகளை உள் வாடகைக்கு விடும் தமிழர்களே அவதானம்!
பிரித்தானியாவின் லண்டன் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் வாடகை வீடுகளில் நிலவும் மனிதத்தன்மையற்ற மற்றும் மோசமான சுகாதார சீர்கேடுகள் காரணமாக, கூட்டு வாடகை வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் நகர சபை கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்யும் பல விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய சம்பவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்: ஒரு வீட்டின் மேல்தளத்துக் கழிப்பறையிலிருந்து நீர் கசிந்து, நேரடியாகக் கீழ்த்தளத்தில் உள்ள சமையலறைக்குள் விழுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த வீட்டு உரிமையாளருக்கு 15,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டிற்குள்...
புலம்பெயர் தமிழர்களே!! அவதானம்!! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மோசடி எச்சரிக்கை:
புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான பயணங்களை மேற்கொள்ள அதிகளவானோர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் காரணமாகத் தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது அதிகரித்து வரும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீலங்கன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: மோசடி முறை:...










