சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து!! Video

0

சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து

காலியில் கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை!

0

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த கொலை சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில்...

சாரயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியாவில் குடும்பஸ்தர் மீட்பு!

0

சாராயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சாராயத்துடன் வயலுக்கு பயன்படும் களை நாசினி மருந்தை கலந்து அருந்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது மாணவன்

0

மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் Ahriff எனும் மாணவன் தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியை இயங்கச் செய்த போது மின் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் (30) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் வீடு ஒன்றினுள் கயிற்றில் தொங்கிய நிலையில் 27 வயது யுவதி அஜந்திகா சடலமாக மீட்பு!

0

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள்.! Video

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள நூலகக் கட்டிடத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களும் வெடிபொருட்களும் நேற்று மாலை (நேற்றுமாலை) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு மகசின்களும், அவற்றுக்குரிய 59 துப்பாக்கி ரவைகளும், அத்துடன் 5 அடி நீளமான மின் வயர்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நூலகத்தின் சீலிங் பகுதிக்குள் இந்த ஆபத்தான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்து, நேற்று இரவு முதலே பல்கலைக்கழக வளாகத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று காலை...

கணவன் வைத்தியசாலையில் அனுமதி! முச்சக்கர வண்டியை விற்ற மனைவி!

0

பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, ​​கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, ​​வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, ​​பண்டாரகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது, ​​முறைப்பாட்டாளரின் மனைவி போலி கையொப்பத்தை பயன்படுத்தி முச்சக்கர வண்டியை விற்றிருப்பது தெரியவந்தது.

மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!

0

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான...

நூற்றாண்டின் கோரத் தாண்டவம்: மெலிசா புயல் (Storm of the Century)

0

முன்னுரை அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'மெலிசா' சூறாவளி, தனது கோரமான வடிவத்தையும், அபரிமிதமான வேகத்தையும் கொண்டு “நூற்றாண்டின் புயல்” (Storm of the Century) என்று வர்ணிக்கப்படுகிறது. 174 ஆண்டுகாலப் பதிவுகளில் ஜமைக்காவைத் தாக்கிய மிக வலிமையான புயலாக இது பதிவாகியுள்ளது. இந்தச் சுழல் காற்று, புவியின் வேகமாக வெப்பமயமாகும் (Rapid Heating) காலத்தின் விளைவுகளை அழுத்தமாக உணர்த்தியுள்ளது. வெறும் 24 மணி நேரத்திற்குள் தீவிரமடைந்து, ஒரு அபாயகரமான வகை 5 புயலாக (Dangerous Category 5 Hurricane) உருவெடுத்த இதன் தீவிரம், மக்கள்...

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட ஹயஸ் வாகனம்! Video

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் பிரண்டு வீதியை விட்டு தூக்கிவீசப்பட்டுள்ளது கொழும்பு நோக்கி மக்களை அழைத்துச் சென்ற குறித்த வாகனம் அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதன் போது இந்த வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்திருக்கின்ற நிலமையில் தெய்வாதீனமாக சிறிய ஒரு காயத்துடன் மாத்திரம் சாரதி...