இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவிப்பு

0

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும்,மிக் 29 விமானம் ஒன்றையும்,எஸ்யு 30 போர்விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாக்கிஸ்தான் தெரிவிக்கவில்லை. இதேவேளை இதனை சிஎன்என்னினால் உறுதிப்படுத்தமுடியவில்லை இதேவேளை இவ்வாறானதொரு தகவலை பாக்கிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் அசீவினை மேற்கோள்காட்டி புளும்பேர்க் வெளியிட்டுள்ளது. சில இந்திய...

ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்தது இந்தியா!! வீடியோ

0

பாகிஸ்தான் மீது யுத்தத்தை தொடங்கிய இந்தியா.ஒபரேஷேன் சிந்தூர் என பெயர் சூட்டியுள்ளது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எனவும் இன்று புதன்கிழமை விவரங்கள் வெளியிடப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்...

பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சியில் 2 வாரம் தூக்கமில்லாமல் இருந்த மைத்திரி!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது. புதன்கிழமை விசாரணை தொடங்கியபோது, மொரிஸ் என்ற செல்வராஜா கிருபாகரன் மற்றும் தனுஷ் என்ற தம்யையா பிரகாஷ் ஆகிய இருவரின் சட்டத்தரணிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர். வழக்குத் தொடரை வழிநடத்திய அரச சட்டத்தரணி தம்மிக...

உலகின் மிக வயதான நபரான மூதாட்டி எதல் கேடர்ஹாம் கின்னஸ் புத்தகத்தில்!!

0

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள உலகின் மிக வயதான நபர், பிரெஞ்சு பெண் ஜான் கல்மெண்ட் (Jeanne Calment). அவள் 1875 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி பிறந்து, 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி 122 வயது 164 நாட்களாக உயிரிழந்தார். அவளது வாழ்க்கை வரலாறு உலகில் எந்த மனிதரும் வாழ்ந்த மிக நீண்ட காலமாகும்.​ ஜான் கல்மெண்ட் தனது நீண்ட ஆயுளை ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துதல், சாக்லேட் சாப்பிடுதல்,...

காஷ்மீர் தாக்குதல்தாரிகள் இலங்கையில் ஊடுருவலா? கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் குழுக்கள் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பயங்கரவாதிகள் இலங்கைக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து...

உக்ரைனிய இளம் பெண் பத்திரிகையாளர் உறுப்புக்கள் அறுக்கப்பட்டு ரஷ்ய இராணுவத்தால் கொல்லப்பட்ட விபரிப்பு!!

0

உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா என்ற 27 வயதான இளம் பெண் ரஷ்ய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்  உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறித்த பெண் ரஷ்ய ராணுவக் காவலில் விலா எலும்பை உடைத்து, கண்கள் மற்றும் மூளையை அகற்றி பல சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் பத்திரிகையாளர் உக்ரைனில் வெளியாகும் செய்தித்தாளான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்காக பணிபுரிந்து வந்தார். இவர்  உக்ரைன் பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழும் உக்ரேனியர்களை சந்தித்து துயரங்களை செய்திகளாக வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மிகவும் துணிச்சல் வாய்ந்த  செய்தியாளர்...

இந்தியா vs பாகிஸ்தான்: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? அணு ஆயுதம் யாரிடம் எவ்வளவு உள்ளது?

0

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல முடிவுகளை இந்தியா எடுத்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் 1972ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் நதிகளின் நீரைத் தடுக்கவோ அல்லது திசை திருப்பவோ செய்யும் எந்த முயற்சியும் "போர் நடவடிக்கையாக" கருதப்படும் என்றும், அதற்கு...

அடுத்த 36 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..! பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயார் நிலையில்..!

0

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆந் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த சூழலில், அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை...

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன?

0

கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர். இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மில்லியன் கணக்கான தற்காலிக வீசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. மொத்தமாக 2.35 மில்லியன் தற்காலிக விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது முந்தைய ஆண்டை விட 1.8...

வறுமைக்காக வேலை தேடி சென்ற தமிழ் பெண்கள் பலியான சோகம்..!தொடரும் பட்டாசு தொழிற்சாலை மரணங்கள்! விபத்துக்களை எப்படி கட்டுப்படுத்துவது!

0

ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சதீஷ்குமார், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த நடேசன் (50), மற்றும் எம். கொல்லப்பட்டியை சேர்ந்த பானுமதி (55) ஆகியோரின் உடல் சிதறி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். சதீஷ்குமாரின் இடது கை சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள சோள வயலில் விழுந்தது.​வெடிவிபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஷ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர்...