வவுனியாவில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை: மீட்புப் பணிகள் தீவிரம்!
வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையே, எதிர்பாராத விதமாக இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. காலையில் அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், கிணற்றுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுப் பார்த்தபோதே யானை உள்ளே தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பாலமோட்டை கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கிராம அலுவலரின் அறிவித்தலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள்...
அன்பான கணவன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக 24 வயது செவ்வந்திக்கு வந்த சந்தேகம்! ஆட்டோவிலிருந்து குதித்து பலி! தென்னிலங்கையில் சம்பவம்!
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி ஒருவர், துயரமான முறையில் உயிரிழந்தார். பனமுர பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த இளம் பெண், யக்மதித்த பகுதியின் புலுத்தோட்டத்தைச் சேர்ந்த தில்ஹாரா செவ்வண்டி ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா.... கடந்த 12-ஆம் திகதி, கணவன்-மனைவி இருவரும் பனமுரவில் அமைந்துள்ள பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும்...
இஸ்ரேலிய அதிகாரிகளால் இலங்கை பெண் கைது! எதற்காக தெரியுமா?
சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இது தொடர்பான விபரங்களை வழங்கினார். பல நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் காசா நோக்கிச் சென்ற படகுப் பேரணியில் பயணித்த இலங்கை பிரஜையான சமீரா மெஹபூப்தீன் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி,...
காவாலியின் ஒருதலைக் காதலை நிராகரித்த வைஷ்னவி கழுத்தறுத்து கொலை! காவாலியை துரத்தி பிடித்து அடித்து கொன்ற பொதுமக்கள்!
ஒரு இளைஞன் தனது காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண்ணை, சாலையின் நடுவே வைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். பாதிக்கப்பட்டவர், ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த 21 வயதுப் பெண் ஆவார். தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை உள்ளூர் மக்கள் பிடித்து, அவரது கைகளையும் கால்களையும் கட்டி, அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவின் ஜட்சர்லாவில் நடைபெற்றது. ஜாட்செர்லாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த ஒய். வைஷ்ணவி (21), கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலையில் சாலையின் நடுவில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்ட...
நீதிபதி இளஞ்செழியனின் தம்பியான யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் இளம்பிறையன் அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை! எதற்காக?
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவும் தான் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்த கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர்...
கிளிநொச்சியில் அதி வேகமாக ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்து! மாணவன் மரணம்!
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரந்தன் பகுதியில் மாணவன் தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் குருநகர் தொழில்நுட்ப கல்லுாரிக்கு முன்னால் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!
யாழ் குருநகர் தொழில்றுட்ப கல்லுாரிக்கு முன் பகுதியில் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று இன்று காலை காணப்படுகின்றது. குறித்த இளைஞன் 34 வயதானவர் என்பதுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நேற்று இரவு தனது சகோதரியுடன் சண்டையிட்டுள்ளார் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இச் சம்பவம் தொடர்பாகப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
யாழ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பொலிஸ் நிலையத்தில் மரணம்! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து...
யாழில் பஸ் நிலையத்தில் நின்ற பிறேம்நாத் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!
யாழ்ப்பாணம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் இராஜகிராமம், ஆண்டாள் வளவு, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பிறேமதாஸன் பிறேம்நாத் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூவர் அடங்கிய குழுவினர் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கியதில் தலை, கை, கால் மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த நபர் முதலில் பருத்தித்துறை...
இன்றைய (19.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட...










