யாழில் அதி வேகம்!! இரு இளைஞர்களுக்கு நடந்த கதி!

0

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளானது.விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!

0

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும் உடனடியாக நித்தம்புவப் பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி எண்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி பயன்படுத்திய தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை, எவ்விதத் தாமதமுமின்றிப் பொலிஸாரிடம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...

காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!

0

45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன் தலைமறைவாகிய வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட தர்மேந்திரன் சர்மிளா என்ற 25 வயது யுவதி தற்போது பிரான்ஸ் பொலிசாரின் பிடியில் உள்ளதாகத் தெரியவருகின்றது.. குறித்த யுவதிக்கு பிரான்ஸ்சில் காதலன் ஒருவன் இருந்துள்ளான். பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான La Courneuve பகுதியில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் சர்மிளாவின் காதலன் ஜெயநேஸ் வேலை செய்து வந்துள்ளான்....

பேருந்தின் சில்லில் சிக்கி இளம் குடும்பஸ்தர் சிந்துஜன் பரிதாப மரணம்

0

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில்  சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில்  உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 27...

முல்லைத்தீவில் கலியாணம் நடக்க ஆயத்தமான நிலையில் இரவு ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் தூங்கச் சென்ற 27 வயது டல்சன் மர்ம மரணம்!

0

புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞனின் உயிரிழப்பு.! முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (18) இரவு ஆட்டிறைச்சி கறியுடன் சாப்பிட்டு உறங்கிய குறித்த இளைஞன், காலையில் தாயார் சென்று எழுப்பும் போது விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், பிரேத பரிசோதனையில் அதிக சந்தோசமாக இருந்ததன் காரணமாக #மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

கனடா செல்ல ஆசைப்படும் தமிழர்களுக்கு நற்செய்தி!! கனடா அகதிகள் குடியேற்றத் திட்டத்தில் அதிரடி மாற்றம்!

0

கனடா அகதிகள் குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்க, அவர்கள் தங்கியிருக்கும் நாட்டின் வெளியேற்ற அனுமதி (Exit Permit) தேவையில்லை என புதிய விதிகள் தெரிவித்துள்ளன. தங்கியிருக்கும் நாட்டின் சட்டப்பூர்வ தகுதிச் சான்று இல்லாவிட்டாலும், அகதிகள் கனடா நிரந்தர குடியிருப்பு விசாவைப் பெற முடியும் என குறிப்பிடப்படுகிறது. வெளியேற்ற அனுமதிச் சீட்டு கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அதிகாரிகளால் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது. ஒருவேளை வெளியேறும் சூழல் மாற வாய்ப்பு இருந்தால், தற்காலிகமாக 6 மாதங்கள் வரை விண்ணப்பத்தை நிறுத்தி வைக்கலாம். முக்கிய அம்சங்கள்: விசா வழங்கப்பட்ட பின்:...

புலம்பெயர் தமிழர்களுக்கு பொருந்துமா? பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

0

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர். சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள்...

பிரபல மோசடி மன்னன் மொஹமட் திருகோணமலையில் அதிரடி கைது.!

0

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று(19) கைது செய்யப்பட்டு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவரை மேலதிக விசாரணைகளுக்கு அழைத்து செல்ல கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் திருகோணமலைக்கு விரைந்துள்ளனர். இவர் மீது இதுவரை 64 பேர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோர்வே விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஷ் பலி! இருவர் படுகாயம்! யாரில் பிழை தெரியுமா?

0

நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த மற்றுமொருவர் ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்தில் பலியானவர் யாழ்ப்பாணம், கரவெட்டி, மந்திகை பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய மார்க்கண்டு பிரகாஷ் என்பவர் ஆவார். எதிர் திசையில் வந்த சொகுசு கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற...

இன்றைய (20.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2,...