இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவருக்கும் ETA கட்டாயம்!
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization - ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும்...
கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் வைத்து கைது!!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. சர்வதேச காவல்துறையின் ஆதரவுடன் கொழும்பு குற்றப்பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷார செவ்வந்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின்...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிசாந்தினியை தேடும் கணவர்!!
வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென, அவருடைய கணவன், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) கடந்த மாதம் 10/09/2025 நாடு திரும்பினார். எனினும், இன்றுவரையிலும் வீட்டுக்குத் திரும்பவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை...
யாழ் செம்மணியில் ஆட்டோ, பஸ், மோட்டார் சைக்கிள் விபத்து!! பிரபல விளையாட்டு வீரர் பலி!!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். வயலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் மோதி பளையில் ஆட்டோ நசுங்கியது!! சாரதி பலி!!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறையுமா? நிபுணர்கள் விளக்கம்
இது AI யின் கருத்து பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பாலியல் ஆர்வம் (libido) குறைதல் இயல்பான ஒன்றாகும், ஆனால் இது தற்காலிகமானது என்றும், எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். 🩺 ஏன் இது நடக்கிறது: கீழ்க்கண்ட காரணிகள் பொதுவாக தாக்கம் அளிக்கின்றன: ஹார்மோன் மாற்றங்கள் பிரசவத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் (Estrogen) மற்றும் ப்ரொஜெஸ்டிரோன் (Progesterone) அளவுகள் குறையும். பாலூட்டும் தாய்மார்களுக்கு ப்ரோலாக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் அதிகரிப்பதால் பாலியல் ஆர்வம் தற்காலிகமாக குறையலாம். உடல் மீளுதல் பிரசவத்தால் உடல் களைப்பாக இருக்கும். சீசேரியன் அல்லது சாதாரண பிரசவம்...
யாழ் போதனா வைத்தியசாலையில் MSO ஆக பணியாற்றும் இளம் குடும்பஸ்தர் ராஜ்குமார் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக...
முந்திரி, பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வளர்ந்த எருமை!! விலை 8 கோடி!! எதற்காக?
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சர்தார் வல்லபபாய் பட்டேல் வேளாண் பல்கலைக்கழக. வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு சந்தை நடைபெறுகிறது. இதில் வட மாநிலங்களின் விவசாயிகள் பலர் பங்கேற்கின்றனர். ஹரியானாவின் விவசாயியான நரேந்திரசிங்கும் தனது எருமையை இங்கு காட்சிக்கு வைத்துள்ளார். மீரட் சந்தையில் இந்த ஹரியானா மாநில எருமைக்கு ரூ.8 கோடி விலை வைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் உரிமையாளர் நரேந்திரசிங் தன் எருமையை விற்பனை செய்ய விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அந்த எருமைக்கு ‘எம்எல்ஏ’ என அதன் உரிமையாளர் பெயர்சூட்டியுள்ளார். இது குறித்து விவசாயி நரேந்திரசிங் கூறுகையில்,...
வெனிசுலா பெண்ணிடம் இழந்தார் ட்ரம்ப்!!
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரை பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருந்தனர். அதுமட்டுமின்றி 8 போர்களை நிறுத்தியிருப்பதால் தனக்கு கிடைக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நோபல் பரிசு குழு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவிற்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு கட்டழகனாக திகழ்ந்தவர் மரணமானது எப்படி? நடந்தது என்ன?
சல்மான் கான் நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார். அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார். அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில்...










