மன்னாரில் ஆடுகளை பார்க்கச் சென்ற அனோஜன் சடலமா மீட்பு!
மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (16) வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அப்பகுதியில் கடும் மழை பெய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற...
விசேட வைத்திய நிபுணருடன் அந்தரங்க தொடர்பு வைத்த 24 வயது தாதி! கலியாணம் செய்த பின் கணவருடன் சேர்ந்து வைத்தியரை அச்சுறுத்தி லட்சக்கணக்கான பணம் பறிப்பு! கைதானது எப்படி?
கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில்,தாதியும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் 24 வயதுடைய குறித்த செவிலியருக்கும் இடையில் சில காலம் நெருக்கமான உறவு இருந்ததாகக்...
யாழில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய (18.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி...
யாழில் சற்று முன் வாள் வெட்டுத் தாக்குதலில் 5 பேர் படுகாயம்!
யாழ் இணுவில் செட்டி வீதி அண்ணா சனசமூக நிலையப் பகுதியில் இரு குழுக்கள் இடையே இன்று இரவு 7 மணியளவில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த தாக்குதலில் காயமடைந்த காவாலிகள் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்
சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட #சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். நீண்ட காலமாகத் தனது குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் சண்டிலிப்பாயில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து...
யாழில் வடிவேலு பாணியில் பொலிசாருக்கு வந்த சோதனை! பூனையை காணவில்லை என முறைப்பாடு!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்தை வீதி பகுதியில் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவது, தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இருக்கும் காணியில் வீடு கட்டும் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அதனில் கல் மணல்கள் பறித்து ஒற்றைச் சில்லு வண்டியில் கொண்டு சென்று வேலை செய்வார்கள் என்றும் ஆரம்பத்திலிருந்து அந்த காணியில் மர நிழலிலும் பாவிக்கப்படாத மலசல கூடத்திலும் தனது பூனை படுத்திருக்கும் என்றும் காணாமல் போன திகதி (2026.04.09)...
வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!
வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. குறித்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன் 3,60,000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சும் உபகரணங்களுடன் சந்தேக...
மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியில் பீட மாணவன் பண்டாரவளையில் பலி ; இரவில் நடந்த பெரும் துயரம்..!
பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16.05.2026) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, இருதயபுரம், கோவில் வீதியைச் சேர்ந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான 22 வயதுடையவர் எனப் பொலிஸார் கூறினர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்த...
யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தங்கியிருந்த சந்திரசேகரம் கொடூரமாக கொலை! 8 இடங்களில் வெட்டு காயம்! மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய் பொடி வீச்சு! சிசிரீவி கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டது!
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு...









