யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தங்கியிருந்த சந்திரசேகரம் கொடூரமாக கொலை! 8 இடங்களில் வெட்டு காயம்! மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய் பொடி வீச்சு! சிசிரீவி கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டது!
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு...
சைக்கிள் பிறேக் செயலிழந்தது! 15 அடி ஆழமான குழிக்குள் வீழ்ந்து 19 வயது இளைஞன் பலி!
கம்பளை, தொரகல - கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் செயலிழந்தமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்றைய (17.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும்...
முறுகண்டிக்கு அருகில் ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்! வீடியோ
ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அப்பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
முல்லைத்தீவில் இரு மாணவர்களை மோதிய பின் தப்பி ஓடி இராணுவ முகாமுக்குள் புகுந்த சாரதி!! வீடியோ
முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் எதிரே விரைந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருமாணவர்கள் காயமடைந்தனர் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் தப்பி ஓடி அளம்பில் இராணுவ முகாமின் அருகில் நிறுத்தி விட்டு இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்தனால் முகாமை சுற்றி மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர் இது தொடர்பான விசாரணையை செம்மலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட...
கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது! எதற்காக தெரியுமா?
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயதான சர்வதன் பாலசுப்பிரமணியம், 34 வயதான கஜன் கருணாநிதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் முக்கிய விவரங்கள்: டெயில்விண்ட் திட்டம் (Project Tailwind): திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்வது தொடர்பான இந்த விசாரணைக்கு "டெயில்விண்ட் திட்டம்" எனப் பெயரிடப்பட்டு, போலீசார் நடவடிக்கைகளை...
யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாகப் பலி!
யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து ஊட்டியுள்ளார். பின்னர் குறித்த குழந்தை சிறிது நேரத்தில் விறைத்துப்போய் காணப்பட்டது. இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின்...
இலங்கைத் தமிழ் இளைஞனைக் காணவில்லை எனத் தேடுகின்றது கனடா பொலிஸ்!
காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. 38 வயதான தர்ஷந்தன், கடைசியாக மே 11, 2026, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு, விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் காணப்பட்டார். தர்ஷந்தன் 6 அடி உயரம், நடுத்தர உடல்வாகு, குட்டையான வெள்ளை மற்றும் கருப்பு முடி கொண்டவர் என்றும், தாடி மழிக்கப்பட்டவர் என்றும் விவரிக்கப்படுகிறார். தர்ஷந்தன் கடைசியாக நீல நிற டி-ஷர்ட் மற்றும் க்ராக்ஸ் காலணிகள் அணிந்திருந்ததாகக் காணப்பட்டார். காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். தகவல்...
இன்றைய (16.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர்...
பிரித்தானியாவில் விசா சர்ச்சை: தமிழ் இளைஞர் மணிவண்ணன் மீது தீவிர விசாரணை!
சமீபத்தில் நடந்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கியூ மணிவண்ணன், பிரித்தானியக் குடிவரவு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. யார் இந்த கியூ மணிவண்ணன்? இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழ் இளைஞர். தன்னை ஒரு 'பாலின அடையாளமற்ற தமிழ் புலம்பெயர்ந்தவர்' என அடையாளப்படுத்துகிறார். நடந்து முடிந்த தேர்தலில் கிரீன் பார்ட்டி (Green Party) சார்பில் எடின்பரோ பிராந்தியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குற்றச்சாட்டு என்ன? மணிவண்ணன் தற்போது மாணவர் விசாவில் (Student Visa)...









