சிங்களம் தெரியாததால் யாழ் சுரேஸிடம் ஏமாந்து செவ்வந்தி குழுவின் வலையில் வீழ்ந்த சாவகச்சேரி தர்சி! நடந்தது என்ன?
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணம் மட்டுவிலைச் சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி அளுத்கம, தொடந்துவ மற்றும் மித்தெனிய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு...
பதவியா – ஹெப்பட்டிப்பொலாவ வீதி விபத்தில் வவுனியா ஆசிரியர் சஞ்சீவா பலி: இருவர் காயம்! வீடியோ
பதவியா - ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதவியா பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு கார் வாகனத்தில் திரும்பிய ஆசிரியர்கள் பதவியா - ஹெப்பட்டிக்கொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்த போது எதிரே வந்த பிக்கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த வவவுனியா மடுக்கந்த ஸ்ரீ தம்மரத்ன வித்தியாதன பிரிவேன ஆசிரியர் சஞ்சீவா அவர்கள்...
யாழ் புன்னாலைக்கட்டுபவன் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்!! அதிர்சிக் காட்சி! வீடியோ
யாழ் புன்னாலைகட்டுவான் பகுதியில் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒன்றேமுக்கால் பவுண் தங்கச்சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.
ஆசிரியரின் துன்புறுத்தல்-9ம் வகுப்பு மாணவன் தவறான முடிவு!
பாலக்காடு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அர்ஜுன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியை ஆஷாவும், முதல்வர் லிசியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் குற்றச்சாட்டுகளின்படி ஆசிரியை ஆஷா, அர்ஜுனை சைபர் செல் மூலம் பயமுறுத்தியதாகவும், ஒரு வருடம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன், பள்ளியை விட்டு வெளியேறும் முன் தனது நண்பரை கட்டிப்பிடித்து, "நான் இறந்துவிடுவேன், இனி நாம் சந்திக்க மாட்டோம்"...
களுத்துறையில் பணத்தை திருடும் காகம்!! நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் முறைப்பாடு!!
களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும்...
மாங்குளத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பவுசர்; இளைஞர் உயிரிழப்பு.. பெண் காயம்.!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் மாங்குளம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் திரவப் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், மற்றுமோர் பெண் படுகாயமடைந்துள்ளார். தற்சமயம் அவர் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னல் தாக்கியதில் சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் பலி!! Video
இந்தியா கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய முதல் நாளே பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை விட அதிக மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், கடலூர் அருகே மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த...
சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!
யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் இன்றைய தினம் (16) 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் இடமாற்றக் குழப்ப நிலை!! வடக்கு ஆளுநரால் வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கை!!
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அவரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக 2025/2026 ஆம் ஆண்டுக்குரிய வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற...
யாழில் திருமணம் முடித்து சில மாதங்களேயான நிலையில் திவ்யா வாகன விபத்தில் பலி!!
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவர் ஏழாலைப் பகுதியில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்.இவ் விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப்...










