செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா சாவகச்சேரி தர்க்ஷி?
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
நான் பிடிபடுவேன் என எனக்கு முன்பே தெரியும்; எனக்கு தற்போது நிம்மதியாக உள்ளது!பொலிஸாரிடம் கூறிய செவ்வந்தி
நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார். நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன் ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன் எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம்...
இஷாரா செவ்வந்தி வெளிநாடு தப்பிச் செல்ல யாழைச் சேர்ந்த ஜே.கே.பாய் உதவி!
நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றுக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இசாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் கெஹேல்பத்ர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட...
புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய ஆலோசனை!
அகதிகளாக பொருளாதார ஏதிலிகளாக ஐரோப்பாவிற்கு படையெடுத்து வந்த புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை 2030 ம் ஆண்டிறகு பின்னர் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது. எப்படி கடினமாக இருக்க போகின்றது என விளக்குகிறேன்… தொடர்ந்து வாசியுங்கள். உலகப் பொருளாதாரம் இப்போது வரலாறு காணாத கடன் சுமையில் தத்தளிக்கிறது, இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவுக்கு, அதாவது Great Depression போன்ற ஒரு நிகழ்வுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. 2025-இல் உலகளாவிய கடன் அளவு $315 trillion ஐ தாண்டியுள்ளது. அதேசமயம், physical money (cash +...
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாககூடும்!
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் கள விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது மனித புதைகுழி காணப்படும் பகுதி சதுப்பு நிலமாக உள்ளதை நீதவான் அவதானித்துள்ளார். இந்தநிலையில், மனித புதைகுழி வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான்...
இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவருக்கும் ETA கட்டாயம்!
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization - ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும்...
கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் வைத்து கைது!!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. சர்வதேச காவல்துறையின் ஆதரவுடன் கொழும்பு குற்றப்பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷார செவ்வந்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின்...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிசாந்தினியை தேடும் கணவர்!!
வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென, அவருடைய கணவன், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) கடந்த மாதம் 10/09/2025 நாடு திரும்பினார். எனினும், இன்றுவரையிலும் வீட்டுக்குத் திரும்பவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை...
யாழ் செம்மணியில் ஆட்டோ, பஸ், மோட்டார் சைக்கிள் விபத்து!! பிரபல விளையாட்டு வீரர் பலி!!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்றைய (13)தினம் இடம்பெற்ற கோர விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். வயலுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி இந்நிலையில் இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் மோதி பளையில் ஆட்டோ நசுங்கியது!! சாரதி பலி!!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.









