புவி வெப்பமடைதல் – தற்போதைய அபாயகரமான மாற்றங்கள்!
பனிக்கட்டி படிமங்கள் (Ice cores), கடல் படிவுகள் மற்றும் புதைபடிவ பதிவுகளின் அறிவியல் சான்றுகள், பூமியின் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த இயற்கை காலநிலை மாற்றங்களை விட, தற்போதைய புவி வெப்பமடைதல் மிக அதிவேகமாக நடப்பதை உறுதிப்படுத்துகின்றன. முந்தைய வெப்பமயமாதல் காலங்கள் பல்லாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்தன; ஆனால் இன்றைய வெப்பநிலை உயர்வு வெறும் சில தலைமுறைகளுக்குள்ளேயே நிகழ்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எரிமலை வெடிப்புகள் அல்லது பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற இயற்கையான காரணிகளால் தற்போதைய வெப்பமயமாதலின் வேகத்தையோ அல்லது தீவிரத்தையோ...
முடக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி? தண்டுவடத்தை மீண்டும் வளரச் செய்யும் உலகின் முதல் மருந்து!
பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தண்டுவடத்தை (Spinal Cord) மீண்டும் சீரமைக்கக்கூடிய உலகின் முதல் மருந்தைக் கண்டுபிடித்து மருத்துவ உலகில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகால தீவிர ஆராய்ச்சியின் விளைவாக, நரம்புகளைப் பழுதுபார்த்து மூளைக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உருவாக்கும் சிகிச்சை முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து எவ்வாறு செயல்படுகிறது? தண்டுவடத்தில் காயம் ஏற்படும்போது, நரம்பு செல்கள் தங்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் திறனை இழப்பதால் முடக்குவாதம் ஏற்படுகிறது. இதுவரை இருந்த சிகிச்சைகள் மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்க மட்டுமே உதவின. ஆனால், இந்த புதிய...
பிரான்சில் கர்ப்பிணி மனைவி விகிர்தாவின் அந்தரங்க உறுப்பை லைட்டரால் எரித்த கிளிநொச்சி. நரேஷ் ற்கு 6 வருட சிறை!! யாரால் கர்ப்பம்? மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!
2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவனுக்கு பிரான்ஸ் Tribunal correctionnel நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவின் கட்டி வைத்து அவளது பெண் உறுப்பை சிகரட் லைட்டர் மூலம் சுட்டு கருக்கியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ்...
இலங்கையைச் சேர்ந்த லண்டன் பிரபல தொழிலதிபர் ராஜகோபாலும் சாரூசனும் சிறைக்குள் சென்றது ஏன்?
மேற்கு லண்டனைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் கந்தையா ராஜகோபால், பிரித்தானியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா இல்லாததால் ஷருசன் குணசேகரன் என்ற இலங்கையரிடம் தனது விமான நுழைவுச் சீட்டை கொடுத்துள்ளார். இதன்போது, சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த கந்தையா, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், அதே நேரத்தில் ஷருசன் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இருவரும் முனையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் சந்தித்து விமான பற்றுச்சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கந்தையாவின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தி...
அவுஸ்ரேலியாவில் மனைவியை ஏன் கொன்றேன்? கணவனின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!
அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் தற்போது தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவை பலனளிக்காமல் சுப்ரியா உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக, அவரது கணவரான...
இன்றைய (21.01.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை. பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையானவை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப்...
ஜேர்மனியில் யாழைச் சேர்ந்த 62 வயது சிவராஜனை 53 வயதான மனைவி துர்கேசினி கள்ளக்காதலனும் சேர்ந்து கொல்ல முயற்சி! நீதிமன்றில் நடந்தது என்ன?
ஜேர்மனியில் நோர்த்ரைன் வெஸ்ட்பேலன் கொலோன் பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கிடையில் நடந்த மோதலில் கணவன் தலைப் பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்களும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மன் North Rhine மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்களுமான சிவராஜன் துர்கேசினி தம்பதிகள் தற்போது சண்டையிட்டு சிறை செல்லும் அளவில் உள்ளார்கள். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளார்கள். இருவர் திருமணம் செய்துவிட்டார்கள் எனத் தெரியவருகின்றது. கடைசி மகள் தற்போது குறித்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில்...
யாழில் இருவருக்கு மரண தண்டனை!! யாழ் மேல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட...
இத்தாலியில் கோப்பி கேட்ட ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியை அடித்துக் கொன்ற இலங்கை குடும்பப் பெண் கவிந்தாவுக்கு 21 வருட கடூழிய சிறை!! நீதிமன்றில் நடந்தது என்ன?
இத்தாலிக்கு வீட்டுப் பணியாளராகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத் தண்டனை எதிர் கொண்டுள்ளார். ரோம் நகரில் வீடு ஒன்றில் முதியவரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான Nawela Kevinda அந்த முதியவரைக் கொலை செய்துள்ளார். பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டமைக்காக முதியவரை மிகக் கொடூரமாக அடித்து அவர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 94 வயதான Nicolò Caronia எனும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலியப் பொலிஸ் துறையில்...
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!
யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.










