ரொசெல்ல வீதி திறப்பு: ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து மீள ஆரம்பம்

0

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் அண்மையில் நிலவிய தொடர் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ரொசெல்ல பகுதி, இன்று (டிசம்பர் 01, 2025) முதல் தற்காலிகமாகப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பாரிய மண் சரிவு மற்றும் கற்பாறைகள் வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால், சில நாட்களாக குறித்த வீதி முழுமையாக மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA)...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SLT-Mobitel இன் அவசர மருத்துவ நிவாரணம்

0

புயல் பாதித்த மக்களுக்காக 247 என்ற இலவச அவசர உதவி எண் அறிமுகம். அண்மையில் வீசிய டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக, SLT-Mobitel நிறுவனம் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதியதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 247 என்ற இலவச அவசர உதவி எண்ணை இரண்டு நிறுவனங்களும் கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த அவசர உதவி இலக்கம், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேர மருத்துவ ஆலோசனை மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச்...

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி திறப்பு: வெள்ள நீர் வடிந்ததால் போக்குவரத்து மீள ஆரம்பம்!

0

டிசம்பர் 01, 2025 - மாலை. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் தாக்கம் மற்றும் தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக நவம்பர் 27ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியூடான போக்குவரத்து, இன்று மாலை (டிசம்பர் 01, 2025) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹாவலி கங்கையின் நீர்மட்டம் எதிர்பார்த்ததை விட வேகமாக வடிந்ததைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் பொலிஸார் இணைந்து மன்னம்பிட்டி - கல்லெல்ல பகுதியின் வீதி நிலையை...

புத்தளத்தில் மேலும் இரு மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

0

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தின் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில் வெள்ளநீரில் அடித்துச் சென்ற இரு மாணவர்கள் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர் பெருக்கில் குறித்த மாணவர்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகொப்டர் விபத்தில் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! – காப்பாற்ற வந்தவரை காப்பாற்ற முடியவில்லை

0

நேற்றைய செய்தியின் தொடர்ச்சி... மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) பிற்பகல் லுனுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராக இருந்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய விமானி ஆவார். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்துக்குள்ளானது பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஆகும். பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட நிவாரணப் பணிகளை வழங்குவதற்காக நேற்று (30) காலை முதல் அது ஒரு பெரிய பணியைச் செய்து...

உயர்தர பரீட்சை உட்பட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு.

0

  2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார். தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் தகவல் தொடர்பு சிரமங்களுக்கு மத்தியில், திணைக்களத்திற்கு அதிக அளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார். ஒத்திவைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மறு அறிவிப்பு உதவுகிறது. நிலைமை சீரானவுடன் புதிய திகதிகள் அறிவிக்கப்படும்.

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்!

0

பொன்னாலைக் கடலில் தொழிலுக்கு சென்ற.குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையை சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி {வயது 62} என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். டித்வா புயல் மற்றும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக எவரையும் கடற்றொழிலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றுக் காலை கடற்றொழிலுக்கு சென்று திரும்பிய இவர் மீ்ண்டும் பிற்பகல் 3.00 மணியளவில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற் போயிருந்தார். 6 மணியாகியும் அவர் கரை திரும்பாத நிலையில் உறவினர்களும் சக தொழிலாளர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது இன்று காலை 10.00 மணியளவில்...

வென்னப்புவவில் ஹெலி விபத்து – அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர்

1

வென்னப்புவ, லுனுவில பகுதியில் சற்று முன்னர் (நவம்பர் 30) அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது (Crash Landing). சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த ஹெலிகொப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வென்னப்புவ மற்றும் லுனுவில பகுதிகளுக்கு இடையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இது ஒரு 'கடுமையான தரையிறக்கம்' (Crash Landing) என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலதிக விபரங்கள் வெளியாகி வருகின்றன.

மூன்று நாட்களில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் – தேசிய நீர் வழங்கல் சபை

0

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொறியியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார். முப்படைப் பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவி பெறப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும்...

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!

0

நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது...