இறால் பண்ணையில் உயிரைமாய்த்த குடும்பஸ்தர்; புத்தளத்தில் துயர சம்பவம்
புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராமத்தில் உள்ள களப்பு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை ஒன்றில் குத்தகை முறையில் தொழில் செய்துவந்த புளிச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.ரிஸ்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு தமது இறால் பண்ணைக்குச் சென்று மின்சார விளக்குகளை ஒளிர விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு அவர் விஷத்தை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின்...
யாழில் மனைவியின் கடைசித் தங்கையை கர்ப்பமாக்கிவிட்டு அப்பாவி மாணவனை சாட்டிய அரச ஊழியரான அத்தான்!!
யாழில் 17 வயதான மனைவியின் கடைசி தங்கையை கர்ப்பமாக்கிய பின் அயல் வீட்டில் வசித்து வந்த அதே வயதான மாணவனை கர்ப்பத்திற்கு காரணம் என மாட்ட நினைத்த 36 வயதான அரச ஊழியர் தொடர்பாக பொலிசாரிடம் மாணவனின் பெற்றோரால் முறையிடப்படவுள்ளது. யாழ் வலிகாமம் பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வரும் அரச ஊழியர் மனைவியின் சொந்த இடமான தென்மராட்சிப் பகுதிக்கு சனி, ஞாயிறு தினங்களில் சென்று தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். தென்மராட்சியில் மனைவியின் சீதன வீட்டிலேயே மனைவியின் கடைசி தங்கையும் தாயும் வசித்து...
யாழில் பாடசாலை அதிபர் பாலகுமார் பலி! எந்தவித குடிப்பழக்கமும் இல்லாதவருக்கு ஈரல் பழுதாகியது ஏன்?
திடீர் சுகவீனமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் யோ. பாலகுமார் தைப் பொங்கல் தினத்தில் மரணமானார். இவர் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனத் தெரியவருகின்றது. கொழும்பு விவேகானந்தாக் கல்லுாரியின் உப அதிபரான இவர், கடந்த வாரம் தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாண உறவுகளோடு கொண்டாட விரும்பி குடும்பத்தினரோடு அவரது சொந்தி இடமான யாழ்ப்பாணம் அச்சுவேலிக்குச் சென்ற வேளை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டு காலமாக...
அமெரிக்காவில் தனது 2 பிள்ளைகளைக் கொலை செய்த தமிழ் குடும்பப் பெண் பிரியதர்சினி கைது!!
அமெரிக்காவில் நியுஜெசி மாநிலத்தில் தனது 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்களை கொலை செய்ததாக 35 வயதான பிரியதர்சினி நடராஜன் என்ற குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கில்ஸ்பறோ பகுதியில் உள்ள இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவர் தனது இரு பிள்ளைகளும் மயக்க நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தனது மனைவி குழந்தைகளுக்கு ஏதோ செய்துவிட்டதாக அவர் பொலிசாருக்கு...
பிரான்சில் பிரபல கடையில் வேலை செய்த பெண்ணை குணா பட கமல் போல் துஸ்பிரயோகம் செய்த 43 வயது வீரசிங்கத்திற்கு 18 மாத சிறை!!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஆடைக்கடையில் பணிபுரிந்த போத்துக்கீசப் பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பின் தொடர்ந்து துன்புறுத்தியதாக 43 வயதான வீரசிங்கம் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் பார்வையிலேயே அந்தப் பெண் தன்னைக் காதலிப்பது தனக்குத் தெரிந்தது எனக் கூறி அந்தப் பெண்ணின் வேலை, இடம், வீடு, தேவாலயம் என அனைத்து இடங்களிலும் இலங்கையர் பின்தொடர்ந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் அவர் எந்தவொரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால்...
ஜெர்மனியின் ஸ்மார்ட் கழிப்பறை மூலம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோயைக் கண்டறியலாம்!
ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை உருவாக்கியுள்ளது. இவை மனிதக் கழிவுகளை (மலம் மற்றும் சிறுநீர்) தானாகவே ஆய்வு செய்து, அதில் உள்ள இரத்த உயிரியக்க குறிப்பான்கள் (Biomarkers), டிஎன்ஏ மாற்றங்கள் மற்றும் வளர்சிதை மாற்ற குறிகாட்டிகளைக் கண்டறியும். இதன் மூலம் குடல் புற்றுநோய், சிறுநீரக நோய், நீரிழிவு மற்றும் கல்லீரல் பாதிப்புகளை, சாதாரண மருத்துவப் பரிசோதனையில் தெரிவதற்கு சராசரியாக 2.1 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாகக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் கழிப்பறைகள் கழிவுகளைப் புகைப்படம்...
பாலைவனத்தில் 500 பில்லியன் டொலர் மதிப்பில் ஒரு அதிசயம் – சவூதி அரேபியாவின் பிரம்மாண்ட சொகுசு பனிச்சறுக்கு தளம்!
சவூதி அரேபியாவின் மெகா நகரத் திட்டமான NEOM-ன் ஒரு பகுதியாக, 'ட்ரோஜேனா' (Trojena) என்ற எதிர்கால குளிர்கால சுற்றுலாத் தலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சவூதி அரேபியாவின் சரவத் (Sarawat) மலைப்பகுதியில் அமையவுள்ளது. இங்குள்ள அதிக உயரமான நிலப்பரப்பு, சுற்றியுள்ள பாலைவனப் பகுதிகளை விட குளிர்ந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது. சுமார் 36 கிலோமீட்டர் நீளமுள்ள பனிச்சறுக்கு சரிவுகள் (Ski slopes) இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் செயற்கைப் பனியைச் சார்ந்தே இருக்கும். அத்துடன், 3 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான செயற்கை ஏரி ஒன்றும் இங்கு அமைக்கப்படவுள்ளது. இது...
இணைப்பாடவிதான செயற்பாட்டால் யாழ் இந்துகல்லூரி மாணவன் மருத்துவபீடத்துக்கு தெரிவாகி சாதனை!
யாழ்ப்பாணம் இந்துக்காலூரி மாணவரான செல்வன் கருணாகரன் திவாசவன் பிறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதித்தனூடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் . இயன் மருத்துவ துறை (Physiotherapy ,University of Colombo பாடத்திற்கு தெரிவாகியிருந்த க.திவாசவன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா வெல்லச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கான Z புள்ளியின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவாகின்றனர். எனினும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ,இணைப்பாடவிதானத்தில் திறமைகளை வெளிப்படுத்திய...
நிதி நெருக்கடியால் இதயத்திற்கு ஆபத்து – இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு இணையான பாதிப்பு!
நீண்டகால நிதி நெருக்கடியானது, பாரம்பரிய இதய நோய் காரணிகளுக்கு இணையாக இதய ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும் என்பது புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் முக்கிய அம்சங்கள்: புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாரம்பரிய காரணிகள் இதயத்திற்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே அளவிலான பாதிப்பைத் தொடர்ச்சியான பணக்கவலையும் ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீண்டகாலமாக நிலவும் பொருளாதாரப் பற்றாக்குறை உடலில் வீக்கத்தை உருவாக்குகிறது. இது இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. பணத்தைப் பற்றிய இடைவிடாத கவலை, மன...
யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தவரே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.










