இன்றைய (07.05.2026) இராசி பலன்கள்!
மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன்,...
யாழில் காரை அப்பளமாக்கிய ஜேசபி! கார் சாரதி படுகாயம்! ஜேசிபி சாரதி கைது!
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இன்று காரும் ஜேசிபியும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ் வந்து நாடு திரும்ப முற்பட்ட இளம் தமிழ் குடும்பப் பெண்ணுக்கு கட்டுநாயக்காவில் நடந்த கொடுமை!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடரும் இலஞ்ச #ஊழல்!! நேற்று நடந்த சம்பவம்(05) - ஐரோப்பா நாடு ஒன்றில் குடியுரிமை பெற்ற ஒருவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விடுமுறையில் இலங்கை வந்து ஒரு மாத காலமாக தங்கி நின்ற பின்னர் நேற்றைய தினம் 5.05.2026, மீண்டும் ஐரோப்பா நாட்டிற்கு புறப்பட தயாராகி அதற்குரிய சகல ஆயத்தங்களுடன் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தார். அவருக்கான பயண விமான சீட்டு விமானம் புறப்படும் நேரம் அதிகாலை 02.05, தூயாய் EK649,...
மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!.
மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் புங்குடுதீவு வித்யா வழக்கு ; மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளது. தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை எவ்வாறாயினும், மேலும் இரு குற்றவாளிகளின்...
யாழ் புங்குடுதீவில் சொகுசு பஸ்சுடன் மோதி விபத்து! ஒருவர் சிதறிப் பலி! வீடியோ
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகிலுள்ள பாலம் வழியாக பயணித்த சுற்றுலா பேருந்தும், புங்குடுதீவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சாலை பாதுகாப்பை கடைபிடிப்போம். 06.05.2026
லட்சம் 25 ரூபாய் தருவதாக கூறி ஓய்வுபெற்ற சிப்பாயை ஏமாற்றிய இராணுவ லான்ஸ் கார்ப்பரல் கைது!
ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் கடனை அடைக்க ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்குவதாக கூறி மோசடி செய்து லஞ்சம் பெற்ற இராணுவ லான்ஸ் கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றிய சஜித் சமீர திசாநாயக்க என்ற இந்த சந்தேகநபர், உதவி தொகையை பெற முன்பணம் செலுத்த வேண்டும் என கூறி மூன்று தவணைகளில் ரூ. 129,600 தொகையை தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆவண கட்டணமாக கூடுதலாக ரூ. 13,457 லஞ்சம் கோரிய வேளையில்,...
இன்றைய (06.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண்...
யாழில் விஜய் இரசிகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள நிலையில், விஜய்யின் வெற்றியை கொண்டாடப் போவதாக கூறிவிட்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (5) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிர விஜய் ஆதரவாளரான குடும்பஸ்தர் ஒருவர், தமிழக தேர்தலில் விஜய் வெற்றியீட்டியுள்ளார், அதனால் மது அருந்தி கொண்டாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடுதல் நடத்திய போது, தனது தந்தையின் வீட்டில்...
முல்லைத்தீவில் ஏஎல் படிக்கும் மாணவியை குறி வைத்து இவர்கள் செய்த கேவலம்
முள்ளியவளையில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இலக்கத்தகடு இன்றி விலைகூடிய மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள், மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதே பகுதிக்கு அண்மித்த பகுதியில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த...









