உடல் எடை கூடுவது ஏன்? சரியான தூக்கம் இல்லையா? கொழுப்பாக மாற்றத் தொடங்கும் உணவு : புதிய ஆய்வு தகவல்!
புதிய ஆய்வுகளின்படி, ஒரு நபர் முறையான உணவு முறையை (Good Diet) பின்பற்றினாலும், போதிய தூக்கம் இல்லையென்றால் அவரது உடல் உணவை கொழுப்பாக மாற்றத் தொடங்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்: தூக்கமின்மை காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) பாதிக்கப்பட்டு, கலோரிக்கள் எரிக்கப்படுவதற்குப் பதிலாக கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றன. போதிய ஓய்வு இல்லாதபோது பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் அதிகரித்து, தேவையற்ற கொழுப்பு உடலில் சேர வழிவகுக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டாலும், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-8 மணிநேரத் தூக்கம் இல்லையெனில் உடல் பருமன் குறையாது.
சீன விஞ்ஞானிகள் எலும்பு முறிவு சிகிச்சையில் புதிய புரட்சி – உடைந்த எலும்பை நிமிடங்களில் ஒட்டும் பயோ பசை
சீன விஞ்ஞானிகள் மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளனர். எலும்பு முறிவுகளை மிகக் குறுகிய காலத்தில் குணப்படுத்தும் உலகின் முதல் "எலும்புப் பசையை" (Bone Glue) அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாகப் போடப்படும் மாவுக்கட்டு அல்லது அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் உலோகத் தகடுகளுக்கு மாற்றாக, இந்தப் பசை உடைந்த எலும்புகளைச் சில நிமிடங்களிலேயே ஒன்றாக ஒட்டுகிறது. இது வெறும் பசை மட்டுமல்ல; எலும்பின் இயற்கையான கட்டமைப்பைப் போலவே வடிவமைக்கப்பட்ட உயிரிப்...
மட்டக்களப்பு இளைஞன் ரினோசனின் மரணம்; பொலிஸார் மீது உறவினர்கள் சந்தேகம்!
சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரணமான இளைஞரின் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்தன. இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான்...
லண்டனில் தமிழ் வர்த்தகரையும் 51 வயது கள்ளக்காதலியையும் ஆடைகள் அற்ற நிலையில் துரத்தி துரத்தி தாக்கிய மனைவி!!
லண்டன் புறநகர்ப் பகுதியான ஓர்பிர்ண்டன் பகுதியில் உள்ள தமிழ்கடை ஒன்றின் 45 வயதான முதலாளியும் கள்ளக்காதலியும் அவரது மனைவியால் அவரது வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது வீட்டில் வைத்து 51 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவருடன் (விசேட தேவைக்குரியவர்) உல்லாசமாக இருந்த போதே மனைவியால் பிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் அமளிதுமளியாகியுள்ளது. குறித்த கடைக்கு வாடிக்கையாளராக தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த தமிழ்க் குடும்பப் பெண் ஒருவருடன் குறித்த வர்த்தகர் பழகி அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளார். வர்த்தகரின்...
விண்வெளியில் இருந்து மின்சாரம் தயாரித்து பூமிக்கு அனுப்பி ஜப்பான் உலக சாதனை!
2025-ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளனர். விண்வெளி சுற்றுப்பாதையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை வெற்றிகரமாக பூமிக்குக் கம்பியில்லா முறையில் அனுப்பி அவர்கள் சாதனை படைத்துள்ளனர். விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட சூரியத் தகடுகள், அங்கு தடையின்றி கிடைக்கும் சூரிய ஒளியைச் சேகரித்து மின்சாரமாக மாற்றின. பின்னர், அந்த மின்சாரம் நுண்ணலை கற்றைகள் (Microwave Beams) மூலம் பூமியில் உள்ள பெறுப்பான்களுக்கு (Receivers) அனுப்பப்பட்டது. இதன் மூலம், விண்வெளி சார்ந்த சூரிய மின்சக்தித் திட்டம் ஆய்வகங்களுக்கு வெளியே நிஜ உலகிலும்...
இன்றைய (16.01.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்கள் மூலம்...
யாழில் காதலனின் அந்தரங்கப் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட பெண் பொறியியலாளர் கைது!! நடந்தது என்ன?!!
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின்...
மட்டக்களப்பில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிகளுக்குள் புகுந்து உள்ளாடைகள் திருடியவன் நையப்புடைப்பு! பிடிபட்டது எப்படி?
மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தாளம்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதியில், பெண்களின் ஆடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொதுமக்களால் கைவசமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்கள் விடுதியில், ஆடைகளை உலர்த்துவதற்காக வெளியில் வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகள், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக காணாமல் போய்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விடுதியில் வசித்து வந்த பெண்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் இந்த சம்பவம் தொடர்பில் அதிக அவதானத்துடன் கண்காணிப்புகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த கண்காணிப்பின் போது,...
மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி!!
மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் ஒரு சிறுவன் கடலில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தேடும் பணியிலும் மக்களும் அந்த பகுதி கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கலா ஓயா பேருந்து அனர்த்தம் – பத்மநிகேதனை கொன்றதாக சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு: ஜனவரி 21 வரை விளக்கமறியல் !
நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது. பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர். பாரதூரமான குற்றச்சாட்டுகள்: பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder) பிரிவு 300: கொலை முயற்சி (Attempt...










