இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!

0

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ் பி பட்டினம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து இன்று செவ்வாய் (18) காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம்,...

அரச வங்கியில் நாளாந்த சம்பளம்! தனியார் வங்கியில் நிரந்தர வேலைக்கு ஆசைப்பட்ட யுவதி ஏமாந்தது எப்படி?

0

பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் புரவுன்லோ தோட்டத்தில் உள்ள யுவதி ஒருவருக்கு இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து நேற்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் பாதிக்கப்பட்ட யுவதி. இது குறித்து அவர் மேலும் கூறுகையில் தான் பணிபுரிந்த அரச வங்கியில் உள்ள நிலையான தொலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்ந்து ரூபாய் 50,000/= பணத்தை ஈசி...

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!

0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை கடற்படையினர் கைது செய்து , நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை,தம்...

கொழும்பிலிருந்து சென்ற ஓட்டோ வானுடன் மோதி விபத்து! ஒருவர் பலி!

0

கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, இன்று 17 ஆம் திகதி ஹட்டனில் இருந்து பொல்பிட்டிய வக்கம நோக்கிச் சென்ற வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், வேன் மோதி உயிரிழந்ததாக பொல்பிட்டிய காவல்துறையின் பொருப்பதிகாரி உப்புல் குமார தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதான எச்.எம். இந்திக பிரியகுமார ஆவார். இந்த விபத்து இன்று காலை 9:00 மணியளவில் ஹட்டன்-வக்கம பிரதான சாலையில் பொல்பிட்டிய-யடிவேலிய சந்திப்பில் நடந்தது. அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர...

இரத்தினபுரியில் மோகன்ராஜ் பேபிஷானி எனும் தமிழ்ச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின் நீர்தேக்கத்தில் தள்ளி கொலை செய்தவன் பிடிபட்டது எப்படி? காட்டிக் கொடுத்த றப்பர் பட்டி!!வீடியோ

0

இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ தினமான சனிக்கிழமை மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளமை ஹப்புகஸ்தன்னை தோட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த யுவதிது கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள◌ார் என்றும் அதன் பின்னர் அவர் நீர்த்தேக்கத்தில் தள்ளிவிடப்பட்டாரா அல்லது குதித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அந்த இடத்திற்கும்...

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை…!

0

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்குஅரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர்...

கம்பளையில் 16 வயதுச் சிறுமியின் கொலை! காதலனின் தற்கொலையின் பின்னணி என்ன?

0

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 வயதுடைய சிறுமி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்த 27 வயதுடைய சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டிருந்தனர். சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்வதற்கு கம்பளை பொலிஸார்...

பாட்டனாருடன் வயலுக்கு சென்ற சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழப்பு..!

0

வயல் வேலைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (14) இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர கிராமத்தில் தனது பாட்டனாருடன் வயல் வேலைக்குச் சென்று வீடுநோக்கி திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மன்னம்பிட்டி, சிங்ஹஉதாகமயைச் சேர்ந்த ஆர்.ஜே.எம். அஷேன் யோமார என்ற 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னம்பிடிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!

0

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கடற்பரப்பில் இன்று (2025.11.15) நீராடச் சென்ற 18 வயது இளைஞர் ஆசிப் அப்துல் ஹமீட் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்தக் கோரி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடற்படையிடம் அவசர உதவியை நாடியுள்ளது. ​ ​இன்று மாலை சுமார் 4:00 மணியளவில், அக்கரைப்பற்று கடற்கரையில் சில இளைஞர்கள் குழு நீராடிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென ஏற்பட்ட அலையின் இழுவையால், இளைஞர்களில் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். ​அவருடன் இருந்த...

யாழில் சிறுமியை பலருடன் சேர்ந்த துஸ்பிரயோகம் செய்த சின்னத்தம்பியின் மரக்குற்றிகளுடன் மருமகன் கைது!!

0

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் 13 வயதுச் சிறுமியை பலருடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்து சிறைக்குச் சென்று பிணையில் வந்து நிற்கும் பொடிமல்லி என அழைக்கப்படும் சின்னத்தம்பி என்பவனுக்காக கொண்டு வரப்பட்ட 25 கடத்தல் முதிரை மரக்குற்றிகளுடன் அவனது மருமகன் கிருஷ்ணகுமார் வட்டுக்கோட்டைப் பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த மரக்குற்றிகள் 50  லட்சம் ரூபாக்களுக்கு மேல் பெறுமதியானது என தெரியவருகின்றது. இம் மரக்குற்றிக் கடத்தல் தொடர்பாக சின்னத்தம்பி தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.