கலா ஓயா பேருந்து அனர்த்தம் – பத்மநிகேதனை கொன்றதாக சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு: ஜனவரி 21 வரை விளக்கமறியல் !
நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது. பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர். பாரதூரமான குற்றச்சாட்டுகள்: பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder) பிரிவு 300: கொலை முயற்சி (Attempt...
அமெரிக்கா vs ஈரான் – துப்பாக்கி ஏந்தாமல் ஆட்சியை கவிழ்க்கும் டிரம்ப்பின் மாஸ்டர் பிளான்!”
அமெரிக்கா vs ஈரான்: ஒரு விரிவான வரலாற்று மற்றும் அரசியல் ஆய்வு முன்னுரை உலக அரசியலில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்திகளாக அமெரிக்காவும் ஈரானும் திகழ்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஒரு நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஜனவரி 15, 2026 நிலவரப்படி, இரு நாடுகளும் ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை அதன் வரலாறு, காரணங்கள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை...
கனடாவில் ஒரு கருப்பு நிற நிசான் கார்! அதற்குள் 4 உயிரற்ற பெண்களின் உடல்கள்! 3 முஸ்லீம்களுக்கு ஆயுள் தண்டனை!!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிங்ஸ்டன் மில்ஸ் லாக் பகுதியில் அந்த காலை ஒரு அதிர்ச்சியோடு விடிந்தது. அமைதியாக ஓடிக் கொண்டிருந்த கால்வாயின் அடியில், ஒரு கருப்பு நிழலைப் போல அது கிடந்தது — ஒரு கருப்பு நிற நிசான் கார். அது ஒரு சாதாரண விபத்து அல்ல. காருக்குள் நான்கு உயிரற்ற உடல்கள். டீனேஜ் வயதிலான மூன்று பெண் குழந்தைகள் மற்றும் சுமார் ஐம்பது வயதுடைய ஒரு பெண். 19 வயது சைனப், 17 வயது சஹார், 13 வயது கீட்டி, மேலும் 52 வயது ரோனா...
போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் ஒன்றாக - தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில்...
யாழில். கடற்கரையில் கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழப்பு – மகன் படுகாயம்
வெலிகம, கம்மல்கொட பகுதியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழந்த நிலையில் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்!
யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் வழி மறித்துள்ளனர். அதனை அடுத்து இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளையும், தாம் எடுத்து சென்ற பயண பொதியையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.கைவிட்டு சென்ற பயண பொதியை பொலிஸார் சோதனை செய்த போது,...
யாழில் கள்ள மண் ஏற்றி வந்த டிப்பர் கொடூர விபத்து! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி! Video
யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளாதாகத் தெரியவருகின்றது. இவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டிப்பர் வாகனம் கள்ள மண் ஏற்றிச் சென்ற போது சாவகச்சேரிப் பொலிசார் துரத்திச் சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
75 நாடுகளின் விசாக்களை முடக்கியது அமெரிக்க வெளியுறவுத்துறை! தீவிரமாகும் நடவடிக்கை!
ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. விசா விண்ணப்பதாரர்களைப் பரிசோதிக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை, தற்போதைய சட்டங்களின் கீழ் விசாக்களை...
மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்!
இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம், தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் (Tamil Nadu State Women’s Netball Team) பயிற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எல்லைகளைக் கடந்து, ஒரு இலங்கையராகத் தென்னிந்திய மாநில அணியொன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இலங்கை விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமாகும். கல்வியிலும் விளையாட்டிலும் ஒரு சரித்திர சாதனை கிரிஜா அருள்பிரகாசம் அவர்கள் அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில்...










