டிக்கோயா கணவன், மனைவி கொலை! பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர். விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி...
இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு! எதற்காக?
19 வருடங்களுக்கு முன் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல வருடங்களாக நடந்த வழக்கு பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிலேயே, பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஜூலை 29ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு...
லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது பிரவீன் சம்பவ இடத்திலேயே மரணம்! நடந்தது என்ன?
நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதியதில் 29 வயது புங்குடுதீவு 6ம் -3ம் வட்டாரம் வேம்படியை பூர்வீகமாகவும், இலண்டன் சவுத்ஹாரோவை வதிவிடமாக கொண்ட திரு, திருமதி மகேஸ்வரன் மணிமேகலாதேவி அவர்களின் புதல்வன் (பிரவீன்) உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை சுமார் 2.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.இதைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை ஏராளமான காவல்துறை வாகனங்கள் மற்றும்...
மட்டக்களப்பில் வாகன விபத்துப் போல் திட்டமிட்டு நடந்த கொலை! 24 வயது வாகனச் சாரதி பிடிபட்டது எப்படி?
துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை - களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மீது கெப் ரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்திருந்ததுடன், விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என...
ஒருவனின் தலையை வெட்டி புத்தர் சிலையின் கையில் வைத்த கருணே லொக்கா பிடிபட்டது எப்படி? வீடியோ
அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 'கருணே லொக்கா' எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல குற்றவியல் வழக்குகள் இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில்...
யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!!
யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.
வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!
தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள CMHA யில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான வைதேகிக்கு பாடசாலை பருவத்தில் காதல் இருந்துள்ளது. அந் நேரத்தில் தனது வயதான மாணவன் ஒருவனுடன் ஏ.எல் படிக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பெற்றோரால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு கொழும்பு சென்று அங்கு உயர் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் பரதநாட்டிய...
லண்டனில் கைக் காசுக்கு குறைந்த ஊதியத்தில் ஊழியரை வேலைக்க அமர்த்தியமை! இலங்கை புகையிலை விற்றமை! இலங்கைத் தமிழனான பாஸ்கரலிங்கத்தின் கடைக்கு தடை!!
பிரித்தானியாவில் லண்டனில் சட்டவிரோதமாக ஒருவரை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டில், இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல அங்காடி ஒன்றின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சோதனையின் போது அங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் வரி செலுத்தப்படாத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2025 நவம்பர் 29 அன்று, ஈலிங் கவுன்சில் அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த சோதனையின் போது பிரித்தானியாவில் தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஒரு நபர்...
கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழன் மரணம்!
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி கோரிக்கையை விடுத்திருந்தார். 2010 ஆகஸ்ட் 13 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை mv sun sea கப்பல் சென்றடைந்தது. mv sun sea கப்பலில் சென்ற 492 இலங்கை தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோரி இருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 17...
சுகாதாரச் சீர்கேடு! யாழ் திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் இழுத்து மூடப்பட்டது!
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் , அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால் , குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளார். அதேவேளை அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு...










