வ்வுனியாவில் பயங்கரம்! இளைஞனின் கண்களை தோண்டிய கும்பல்!

0

வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் எட்டுப் பேரைக் கொண்ட குழுவொன்றினால் வழிமறிக்கப்பட்டுள்ளார். சரமாரி தாக்குதல் குறித்த கும்பல் அந்த இளைஞர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சையின் பின்னர்...

வீதியை கடக்க முயன்ற முதியவரை மோதித்தள்ளிய கார்; ஸ்தலத்தில் பலி! பரந்தனில் பரபரப்பு

0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55 வயதான புன்னைநீராவி கண்ணகிநகரைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது!

0

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு காவாலிகளை கைது செய்து சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2கிராம் 380 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , மூவரையும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

புத்தளத்தில் சகயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு பலியான காட்சி – வீடியோ

0

தனது மனைவியுடன் புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் புத்தளம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்துன் தாரகா என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.  

முல்லைத்தீவில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த புதுக்குடியிருப்பு இளைஞன் பலி!

0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இலங்கையில் வெயில் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக விடுமுறை காலங்களிலும், வறட்சியான காலநிலையிலும் இவ்வாறான அனர்த்தங்கள்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் விதுசன் மரணம்! நடந்தது என்ன?

0

பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கதிர்காமநாதன் விதுசன் என்பவர்  என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பெந்தொட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய ராசி பலன்கள் (21.04.2026)

0

மேஷம் இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியானநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 7, 9 ரிஷபம் இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்....

யாழ் வண்ணார்பண்ணையில் 160 பரப்பு காணி கள்ள உறுதி மூலம் விற்பனை! ஒருவர் கைது!

0

யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதி மூலம் காணி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கு கடந்த ஒரு வருட காலமாக பொலிஸார்...

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன்! பலரால் துஸ்பிரயோகம்! தாங்க முடியாது கண்டி ஏரியில் குதித்த மனைவி!

0

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவரையும் கைது செய்வதற்கு அலவதுகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முப்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கண்டி ஏரியில் குதித்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அகுரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப்...

அவதானம் பெண்களே! சுவிஸ் தமிழ்ப் பெண் யாழ் வந்து போதைக்கு அடிமையானது எப்படி? பல இளைஞர்களுடன் தொடர்பு!

0

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலையில் சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ் மயிலிட்டிப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தனது பெற்றோரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட தொடக்கத்தில் குறித்த குடும்பப் பெண்ணும் கணவனும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். வீட்டு அத்திவார வேலைகளை முடித்துக் கொண்டு கணவன் சுவிஸ் சென்றுவிட மனைவி யாழ்ப்பாணத்தில் தனது உறவுகளுடன் நின்று வீடு கட்டும் வேலையை மேற்பார்வை செய்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த சிவ மாதங்களாக...