இன்றைய (01.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உடல்நிலை மிகவும் அற்புதமாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களுக்குப் பெருமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழ்வீர்கள். பணவரவுகள் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் பாக்கியமும், புத்திரபாக்கியமும் ஏற்படுவதற்கான...
கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம்! 6 பேர் பலி! பலர் படுகாயம்!
கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேகாம – மீகொட பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வெசாக் தானசாலை அருகே வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய பின்னர் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த...
யாழில் பொலிசாரால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வரப்பட்ட ரவுடி மோதி ஒருவர் படுகாயம்! வீடியோ
யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றுமாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த நபர்...
பிருத்தானியாவில் சிறுவர்களுடன் தொடர்பில் இருந்த தமிழ் இளைஞன் டேவிட் செல்லப்பாவுக்கு 10 வருட கடூழிய சிறை!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். பிரித்தானியாவின் லண்டனில், இணையம் மூலமாகச் சிறுவர்களைத் துன்புறுத்திய தமிழ் இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இணையத்தளம் வாயிலாக ஏமாற்றி, அவர்களுக்குப் பாலியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுத்து வந்த 31 வயதான டேவிட் செல்லப்பா என்பவருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கைது மற்றும் பின்னணி: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறுவர் ஒருவரை நேரில் சந்தித்துப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது, லண்டன் மாநகரப் போலீசாரால் இவர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார். இவருடைய மொபைல்...
யாழில் சீட்டு முதலாளியின் வீட்டில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணமும் மற்றுமொரு வீட்டில் 25 பவுண் நகையும் திருட்டு
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர். வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தை களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில்...
சென்னையில் சாராய பாருக்குள் நண்பனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய இலங்கைத் தமிழ் யுவதியை காரால் நசுக்கி கொலை!! விஜயிடம் நியாயம் கேட்டு தாயார் கதறல்! நடந்தது என்ன?
சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணை, காரால் இடித்து தள்ளி கொலை செய்துள்ள நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 18 வயதான இறந்த பெண் விழுப்புரம் அருகே உள்ள ஒரு இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாமில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் ஒரு நண்பரைச் சந்திக்க சென்னைக்கு வந்திருந்தார். சனிக்கிழமை இரவு, அவர் தனது...
பிரான்ஸ் பாரிஸில் முன்னாள் புலி உறுப்பினர் குட்டி பொலிசாரால் சுட்டுக் கொலை! வீடியோ
பிரான்ஸ் பரிஸில் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த குட்டி என்பவர் நேற்று 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.. பாரிஸின் வடகிழக்கு பகுதியிலுள்ள பொபிக்னி (Bobigny) என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தகராறில், இரண்டு பேரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய தாகவும் காவல்துறை உடனே சரணடைய கூறியபோதும் மறுத்து மேலும் பலரை காயப்படுத்தியதை தொடர்ந்து காவல் துறையிரையும் மிரட்டிய இந்த நபர் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார். இவர் மனப்பிறழ்வு நோய்க்கு உள்ளாகியிருந்ததாக...
இன்றைய (31.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ரிஷபம் இன்று சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1,...
இலங்கையில் உயிருக்கு போராடும் தந்தை! லண்டனில் தவிக்கும் இலங்கை மாணவன்:
பிரித்தானியாவிற்கு மாணவர் விசாவில் சென்ற இளைஞன், இலங்கையில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில் லண்டனின் வாட்போர்ட் பகுதியில் தங்கியிருந்து, வணிக நிர்வாகத் துறையில் பிஹெச்டி (PhD) படித்து வரும் இலங்கை மாணவன் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 34 வயதான சலிந்த மல்கொட என்ற மாணவனின் 69 வயதான தந்தை, இலங்கையில் கடுமையான சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அவரது தந்தைக்கு அவசரமாக கதீட்டர் (Catheter) அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் நிலைமை மோசமடையும் என...
லண்டன் நகர சபை ஒன்றின் மேயராக தெரிவான இலங்கைத் தமிழர் – தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பெருமை!
லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 மே 21 அன்று நடைபெற்ற வருடாந்திர மன்றக் கூட்டத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.இலங்கையில் பிறந்த தயாளன், 1970ஆம் ஆண்டு பிரித்தானியாவில் குடிபெயர்ந்தார். 1976 முதல் கிங்ஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.முதன்முதலில் 2014-ஆம் ஆண்டு டோல்வொர்த் வார்டின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றத் தொடங்கினார்.இதற்கு முன்னர், ஏற்கனவே 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்திலும் கிங்ஸ்டன் மேயராகப் பணியாற்றி, பன்முகத்தன்மை, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக...









