வெளிநாட்டில் 2 பிள்ளைகள்! யாழில் கமலேஸ்வரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! கமலேஸ்வரியின் சடலத்திற்கு அருகில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டது இதுதான்!
யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார். இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதன்போது அயலவர்கள் அங்கு...
இத்தாலியில் பெண் ஒருவரை ஏமாற்ற முற்பட்ட இலங்கை இளைஞனை வீட்டுக்குள் பதுங்கியிருந்து சினிமா பாணியில் பிடித்த இத்தாலிப் பொலிசார்! நடந்தது என்ன?
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவரை ஏமாற்றி பணம் மற்றும் தங்க நகைகளை பறிக்க முயன்ற 36 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், குறித்த இளைஞர் தன்னை 'மாஸ்கோவா' (Moscova) பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு மூதாட்டிக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், அதற்காக வீட்டில் உள்ள பணம் மற்றும் தங்க நகைகளை ஒரு இடத்தில் பாதுகாப்பாக எடுத்து...
கிளிநொச்சியில் மின சூறாவளி! பிடுங்கி எறியப்பட்ட கூரைகள்! வீடியோ
இன்று பிற்பகல் பெய்த கடும் மழையும் காற்றும் காரணமாக பரந்தன் பொதுச் சந்தை சேதமடைந்துள்ளது. புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் காற்றினால் சந்தையின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிரடித் திருப்பம் ; திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுமா?
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரான்ஸுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களின் தகவல்படி, இந்தப் பயணத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:- தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானாவிடம் நேரடி விசாரணைகளை முன்னெடுப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அஸாத் மௌலானாவினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் திடுக்கிடும் வெளிப்படுத்தல்கள் குறித்து...
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவத்தின் தொடர்ச்சி! அதிகாரி தவறான முடிவு எடுத்து பலி!
ஹேக்கர்களால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹக்கர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர், குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
நடிகர் விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்! |
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தற்போது விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதற்கு பதிலாக, காணொளி மூலம் முன்னிலையாக அனுமதி வழங்கிய நிலையில் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. வழக்கு விசாரணை மற்றும் நீதிபதி மாற்றம் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, தற்போது...
இன்றைய (30.04.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்:...
யாழில் ஏ.எல் கணிதப் பிரிவு மாணவன் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் மரணம்! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் இன்றையதினம் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி கேமிற்கு அடிமையாகியதால் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். அவர் உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில்...
சாராயம் வாங்க காசு கொடுக்காத கோபம்!! அம்மாவின் கால்களை முறித்த மகன்!
நாட்டில் இளையோரை போதையில் இருந்து கட்டுப்பட்டுத்த ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் கேகாலை - தேவலகம பகுதியில் போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் திகதி இக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஆத்திரமடைந்த இளைஞன் தடியால் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கேகாலை - தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம் 5,000 ரூபா...
இலங்கையில் சம்பவம்! பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கடும் மோதல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்... மின்னேரியா காவல் நிலையத்தையே உலுக்கிய மோதல்... மின்னேரியா காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக நடந்த கடுமையான மோதலால் ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ந்தது. (25), பணியின் போது ஒரு காவல் ஆய்வாளருக்கும் இன்னுமொரு காவலருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் வன்முறைச் சண்டையாக முற்றியது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆய்வாளர் ஜெயந்திபுர மருத்துவமனையிலும், காவல் காவலர் ஹிங்குரகொட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு கடன் தொடர்பான பிரச்சினை தெரியவந்துள்ளது. காவல் காவலர்...










