மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது!

0

மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்களைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மந்துவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நகைகள் மற்றும் பணம் உட்பட சுமார் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றிருந்தனர். இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட...

இன்றைய (26.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு...

கொழும்பை உலுக்கிய சம்பவம்! 5 வருடங்களுக்கு முன் காணாமல் போன தம்பதிகள் சடலங்களாக மீட்பு! நடந்தது என்ன?

0

கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு இது தொடர்பாக உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், நீண்ட காலமாக எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் விசாரணை முடங்கியிருந்தது. அதிருப்தியடைந்த...

யாழில் 4 கலியாணம் செய்த இணுவில் மாப்பிளை! கடைசி மனைவியுடன் நடந்த சண்டையால் 5 வது கலியாணம் செய்ய முற்பட்டதால் நடந்த அடிபிடி!

0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாகத் திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து இணுவில் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்நிலையில், இது குறித்துக் கேட்பதற்காக அந்தப் பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியிலுள்ள குறித்த நபரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது அந்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. வீட்டிற்கு உள்ளே...

காலி சொகுசு பங்களாவில் ‘சீன – வியட்நாம்’ கும்பல் சிக்கியது! 84 போன்களுடன் பின்னணியில் நடந்த அதிர்ச்சிப் பின்னணி!

0

இலங்கையின் அமைதியான சுற்றுலாப் பிரதேசமான காலியில், திரைமறைவில் இயங்கி வந்த பாரிய சர்வதேச இணையப் பணமோசடி (Online Scam) கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! ​ என்ன நடந்தது? ​நேற்று மாலை, பொத்தல பொலிஸ் பிரிவின் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டை முற்றுகையிட்ட காலி மாவட்ட பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு தங்கியிருந்த 15 சீன நாட்டவர்களையும் 06 வியட்நாம் நாட்டவர்களையும் (மொத்தம் 21 பேர்) மடக்கிப் பிடித்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்! ​ கைப்பற்றப்பட்ட "டிஜிட்டல்"...

இன்றைய (25.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 ரிஷபம் இன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால்...

லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம ஒன்றின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடாத்திய கொடூர சம்பவம்!

0

பிரித்தானியாவின் லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue) அமைந்துள்ள தமிழ் குடும்பத்தின் குடியிருப்பு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் பின்புற கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்திப் பெறுமதியான மற்றும் உணர்வுப்பூர்வமான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்டவை: பாதிக்கப்பட்ட குடும்பத்தின்...

மட்டு’வில் 31 வயது மனைவி இன்பமலர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது!

0

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், படுகாயமடைந்த மனைவி இரண்டு மாதங்களின் பின்னர், இன்று உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இன்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் திகதி இந்தப் பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, பெண்ணின்...

யாழில் பாதசாரி கடவையூடா வீதியைக் கடந்த நவமலர் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!

0

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை - புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவமலர் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர். இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக வீதியை கடந்தனர். இதன்போது நெல்லியடி...

கொழும்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கேவலம்!!

0

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த தனது தாயாருக்கு ‘இமிடேஷன்’ ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக் கொண்டிருப்பதை அவர்...