முல்லைத்தீவில் கலியாணம் நடக்க ஆயத்தமான நிலையில் இரவு ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் தூங்கச் சென்ற 27 வயது டல்சன் மர்ம மரணம்!

0

புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞனின் உயிரிழப்பு.! முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (18) இரவு ஆட்டிறைச்சி கறியுடன் சாப்பிட்டு உறங்கிய குறித்த இளைஞன், காலையில் தாயார் சென்று எழுப்பும் போது விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், பிரேத பரிசோதனையில் அதிக சந்தோசமாக இருந்ததன் காரணமாக #மாரடைப்பு வந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

கனடா செல்ல ஆசைப்படும் தமிழர்களுக்கு நற்செய்தி!! கனடா அகதிகள் குடியேற்றத் திட்டத்தில் அதிரடி மாற்றம்!

0

கனடா அகதிகள் குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்க, அவர்கள் தங்கியிருக்கும் நாட்டின் வெளியேற்ற அனுமதி (Exit Permit) தேவையில்லை என புதிய விதிகள் தெரிவித்துள்ளன. தங்கியிருக்கும் நாட்டின் சட்டப்பூர்வ தகுதிச் சான்று இல்லாவிட்டாலும், அகதிகள் கனடா நிரந்தர குடியிருப்பு விசாவைப் பெற முடியும் என குறிப்பிடப்படுகிறது. வெளியேற்ற அனுமதிச் சீட்டு கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, அதிகாரிகளால் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது. ஒருவேளை வெளியேறும் சூழல் மாற வாய்ப்பு இருந்தால், தற்காலிகமாக 6 மாதங்கள் வரை விண்ணப்பத்தை நிறுத்தி வைக்கலாம். முக்கிய அம்சங்கள்: விசா வழங்கப்பட்ட பின்:...

புலம்பெயர் தமிழர்களுக்கு பொருந்துமா? பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

0

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர். சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள்...

பிரபல மோசடி மன்னன் மொஹமட் திருகோணமலையில் அதிரடி கைது.!

0

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று(19) கைது செய்யப்பட்டு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், இவரை மேலதிக விசாரணைகளுக்கு அழைத்து செல்ல கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் திருகோணமலைக்கு விரைந்துள்ளனர். இவர் மீது இதுவரை 64 பேர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோர்வே விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஷ் பலி! இருவர் படுகாயம்! யாரில் பிழை தெரியுமா?

0

நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த மற்றுமொருவர் ஹெலிகாப்டர் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்தில் பலியானவர் யாழ்ப்பாணம், கரவெட்டி, மந்திகை பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய மார்க்கண்டு பிரகாஷ் என்பவர் ஆவார். எதிர் திசையில் வந்த சொகுசு கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிற...

இன்றைய (20.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2,...

வவுனியாவில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை: மீட்புப் பணிகள் தீவிரம்!

0

வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையே, எதிர்பாராத விதமாக இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. காலையில் அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், கிணற்றுக்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுப் பார்த்தபோதே யானை உள்ளே தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பாலமோட்டை கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கிராம அலுவலரின் அறிவித்தலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள்...

அன்பான கணவன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக 24 வயது செவ்வந்திக்கு வந்த சந்தேகம்! ஆட்டோவிலிருந்து குதித்து பலி! தென்னிலங்கையில் சம்பவம்!

0

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி ஒருவர், துயரமான முறையில் உயிரிழந்தார். பனமுர பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த இளம் பெண், யக்மதித்த பகுதியின் புலுத்தோட்டத்தைச் சேர்ந்த தில்ஹாரா செவ்வண்டி ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா.... கடந்த 12-ஆம் திகதி, கணவன்-மனைவி இருவரும் பனமுரவில் அமைந்துள்ள பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும்...

இஸ்ரேலிய அதிகாரிகளால் இலங்கை பெண் கைது! எதற்காக தெரியுமா?

0

சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இது தொடர்பான விபரங்களை வழங்கினார். பல நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் காசா நோக்கிச் சென்ற படகுப் பேரணியில் பயணித்த இலங்கை பிரஜையான சமீரா மெஹபூப்தீன் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி,...

காவாலியின் ஒருதலைக் காதலை நிராகரித்த வைஷ்னவி கழுத்தறுத்து கொலை! காவாலியை துரத்தி பிடித்து அடித்து கொன்ற பொதுமக்கள்!

0

ஒரு இளைஞன் தனது காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண்ணை, சாலையின் நடுவே வைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். பாதிக்கப்பட்டவர், ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த 21 வயதுப் பெண் ஆவார். தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை உள்ளூர் மக்கள் பிடித்து, அவரது கைகளையும் கால்களையும் கட்டி, அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவின் ஜட்சர்லாவில் நடைபெற்றது. ஜாட்செர்லாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த ஒய். வைஷ்ணவி (21), கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலையில் சாலையின் நடுவில் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்ட...